மதுரை, செப். 18- கடும் நிதிச்சுமையைச் சந்தித்து வரும் மதுரை காமராசர் பல்க லைக்கழகத்திற்குக் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை ரூ.58 கோடியை வழங்கி யிருந்தது. ஆனால் இந்த ஆண்டு வெறும் ரூ.8 கோடியை மட்டுமே வழங்கியுள்ளது ஏற்புடையதல்ல. இந்த விஷயத்தில் தமிழ்நாடு முதல்வர் தலையிட்டு பல்கலைக் கழகத்திற்கு நீதியும், நிதியும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தமி ழக முதல்வருக்கு எழுதியுள்ள கடி தத்தில் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. அனுப்பியுள்ள கடிதத்தின் விபரம் வருமாறு: மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் தமிழகத்தின் இரண்டாவது பெரிய பல்கலைக்கழகம் என்பது மட்டுமல்ல, தென் தமிழகத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்றானது ஆகும். மதுரை காமராஜர் பல்க லைக்கழகத்தின் வரம்பிற்குட்பட்ட 117 கல்லூரிகளில் ஏறத்தாழ 1,50,000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். சீரிய செயல்பாட்டிற் காக 2022 ஆம் ஆண்டு யுஜிசி A++ என்ற உயர்தர சான்றிதழ் வழங்கி யுள்ளது. எனவே, இன்றளவும் தென் தமிழகத்தின் உயர் கல்வி முன்னேற்றத்திற்கு இந்த பல்க லைக்கழகத்தின் பங்கு அளப்பரி யது. ஆனால் சமீபகாலமாக, இந்த பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாகச் சூழல் நிதி பற்றாக் குறையால் வெகுவாக பாதிக் கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்துப் பல்கலைக்கழகங் களும் தங்களது சொந்த மற்றும் அரசு நிதி ஆதாரங்களை கொண்டு நடத்தப்படுகின்றன. தொலைதூரக் கல்வி இயக்கத்தின் வருவாய் வீழ்ச்சி மற்றும் தன்னாட்சிக் கல் லூரிகளின் வளர்ச்சியால் ஏற்பட்ட தேர்வு கட்டண இழப்பின் காரண மாக மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் சொந்த நிதி ஆதாரங் கள் வெகுவாக பலவீனமடைந்துள் ளன. பல்கலைக்கழகத்தில் 159 ஆசிரியர்களும் (காலிப்பணியிடம் 181 - 53%), 231 நிர்வாக அலுவலர் களும் (காலிப்பணியிடம் 577 - 64%) பணியாற்றி வருகின்றனர். இது தவிர, 1181 க்கும் மேற்பட்ட ஓய்வூதி யர்கள் மற்றும் 393 தற்காலிக பணி யாளர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கான நிதி பல்கலைக்கழகத்தின் சொந்த நிதியிலிருந்து மட்டுமே பெறப்படு வதால், பல்கலைக்கழகத்தின் நிதி பற்றாக்குறை படிப்படியாக அதி கரித்துள்ளது. இந்த நிலையில், மதுரை காம ராஜர் பல்கலைக்கழகத்திற்கு கடந்த வருடம் வழங்கப்பட்ட ரூ.58 கோடி மாநில அரசு நிதி நடப்பு நிதி யாண்டில் வெறும் ரூ.8 கோடியாக குறைக்கப்பட்டிருப்பது நிதி பிரச்ச னையை தீவீரமடையச் செய்துள் ளது. அரசு நிதி சுமார் ரூ.50 கோடி அளவிற்கு வெட்டப்பட்டுள்ளதன் காரணமாக, பல்கலைக்கழகம் இந்த கல்வியாண்டில் சுமார் 7 மாதங்களுக்கு மட்டுமே சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க முடி யும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதுதவிர, பல்கலைக்கழக நிதி நெருக்கடியினால் உள்கட்டமைப்பு பற்றாக்குறை மற்றும் காலிப்பணி யிடங்கள் போன்றவை பல்கலைக் கழகத்தின் ஆய்வு மற்றும் கல்விப் பணிகளையும், நிர்வாகப் பணி களையும் கடும் நெருக்கடிக்கு உள் ளாக்கியுள்ளன. இந்த பிரச்ச னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, பல்கலைக் கழக ஆசிரியர்கள் ஐந்தாவது நாளாக கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சூழலில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கான நிதி நெருக்கடியை சீர்செய்ய தமிழ்நாடு அரசின் நேரடி தலையீடு மிக அவசி யம் என கருதுகிறேன். இந்தப் பின்னணியில், கீழ்க் கண்ட கோரிக்கைகளை தங்களது பரிசீலனைக்கு வைக்க விரும்பு கிறேன்: அண்ணாமலை பல்கலைக்கழ கத்தின் ஆண்டு நிதித் தேவையை தமிழக அரசு ஏற்றிருப்பது போல, இந்த ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு உடனடி யாக ரூ.100 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும். தஞ்சை பல்கலைக்கழக ஓய்வூ தியதாரர்களுக்கான நிதியை தமிழக அரசு ஏற்றுள்ளது போல, மதுரை காமராஜர் பல்கலைக்கழ கத்தின் ஓய்வூதிய சுமையை அரசு ஏற்க வழிவகை செய்ய வேண்டும். மேற்கூறிய கோரிக்கைகளை நிறைவேற்றி, லட்சோப லட்சம் மாணவர்களும் பொதுமக்களும் பயன்பெறும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கல்வி மற் றும் நிர்வாகச் சூழலை காத்திட வேண்டும். இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.