மதுரை, செப்.16- மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேச னின் உள்ளூர் தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து ரூ.3.50 லட்சம் மதிப்பீலான உயர் மின் கோபுரத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. மதுரை மாநகராட்சி 79-ஆவது வார்டு ஜீவா நகர் 1-ஆவது தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர் மின்கோபுர விளக்கினை மக் கள் பயன்பாட்டிற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வெள்ளி யன்று திறந்து வைத்தார். நிகழ்வில், துணை மேயர் டி.நாகராஜன், மண்ட லத் தலைவர் சுவிதா விமல், மாமன்ற உறுப்பினர் லக்ஷிகா ஸ்ரீ, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் ம.பால சுப்பிரமணியம், எஸ்.அழகர் சாமி, பகுதி செயலாளர் ஏ. எஸ்.செந்தில்குமார் உள் ளிட்ட பலர் கொண்டனர். இதைத்தொடர்ந்து ரத்தினபுரதத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிஐடியு வீர காளியம்மன் கார், வேன் ஸ்டாண்டு சங்கப் பலகை யை சு.வெங்கடேசன் எம்.பி., திறந்து வைத்தார். இதில், துணை மேயர் டி.நாகராஜன், சங்க நிர்வாகிகள் ஆர்.பாஸ்கரன், சிரஞ்சீவி, மிதுன் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.