மதுரை, மே 4- மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் முன் புறம் புதிதாக அமைக்கப் பட்ட உயர்கோபுர மின் விளக்கை ஆணையாளர் சிம் ரன்ஜீத் சிங் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பயன்பாட் டிற்கு கொண்டுவந்தார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடே சன் தொகுதி மேம்பாட்டு நிதி யில் இருந்து மாநகராட்சி பகு திகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இதன் படி மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் முன் புறம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக் கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கினை சு.வெங்க டேசன் எம்.பி. இயக்கி வைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். இந்த உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டதன் மூலம் தல்லாகுளம் பெரு மாள் கோவில் முன்புறம் பகுதி முழுவதும் அதிக மின்ஒளியில் வெளிச்சம் தரக்கூடிய பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் அனை வருக்கும் பாதுகாப்பான பகு தியாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தள பதி, மு. பூமிநாதன், துணை மேயர் தி.நாகராஜன், மண்ட லத் தலைவர் சரவணபுவ னேஸ்வரி, நகரப்பொறியா ளர் அரசு, உதவி ஆணையா ளர் வரலெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் திமகேஸ் வரன், உதவி செயற்பொறி யாளர் காமராஜ், மாமன்ற உறுப்பினர் முருகன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மா. கணேசன், வடக்கு - 1 பகு திக்குழு செயலாளர் வி. கோட்டைச்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் பி. ராதா, மதிமுக மாவட்டச் செயலா ளர் முனியசாமி உட்பட மாந கராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.