மதுரை,பிப்.23- மதுரையில் ரூ.26 கோடி மதிப்பில் மூன்றாவது கேந் திரிய வித்யாலயா பள்ளிக் கட்டிடப் பணிகளை மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் பிப்ரவரி 23 வியாழனன்று துவக்கி வைத்தார். மதுரை மாவட்டத்தில் மூன்றாவது கேந்திரிய வித் யாலயா பள்ளி மதுரை இடை யபட்டியிலுள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாம் வளாகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் செயல்பட துவங்கியது. இந்த நிலையில் கேந்தி ரிய வித்யாலயா பள்ளிக்கு நிரந்தர கட்டிடம் கட்டும் வகையில் அப்பகுதியில் ரூ. 26 கோடியே 33 லட்சம் மதிப் பீட்டில் புதிய கட்டடம் கட்டு வதற்கான கட்டிடப் பணி யினை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் துவக்கி வைத்தார். அந்த விழாவில் சு. வெங்கடேசன் எம்.பி., பேசு கையில், நாடாளுமன்றத் தின் கல்வி நிலைக்குழு உறுப் பினர் என்ற முறையில் கடு மையான போராட்டத்தை நடத்தி மதுரை மாவட்டத்திற் கான மூன்றாவது கேந்திரிய வித்யாலயா பள்ளியை பெற்று வந்தேன். இதன் தொடர்ச்சியாக பள்ளிக்கட்டி டத்துக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தேன். இந்தப்பின்னணியில் பள்ளி துவங்கிய அடுத்த ஆண்டே கட்டிடத்துக்கான நிதி ஒப்புதல் கிடைத்துள் ளது. சில இடங்களில் பள்ளி துவக்கப்பட்டு 10 ஆண்டு களாகியும் தற்காலிக கட்டி டத்தில்தான் பள்ளி செயல் படுகிறது. ஆனால் நமது மதுரையில் பள்ளி துவங்கி ஒரே ஆண்டில் புதிய கட்டி டத்துக்கு ரூ.26.33 கோடி செலவில் கட்டிடம் கட்ட ஒப் புதல் பெறப்பட்டது. இக்கட்டிடப் பணிகள் ஒன்றரை ஆண்டுகளில் நிறைவு பெறும். இந்த நேரத்தில் நான் அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறி கட்டிடப்பணியை துவக்கிவைத்தார். இந்நிகழ்வில் பள்ளியின் முதல்வர் பானுமதி, இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் லெப் கமேண் டெட் மார்கண்டேவ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலைச்செல்வன், மாயாண்டி ஆகியோர் பங்கெடுத்தனர்.