மதுரை, ஏப்.3- சென்னை - கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயிலுக்கு வழக்கத்தை மாற்றி இந்தி தெரிந்த ஓட்டுநர்களை பணியமர்த்த ரயில்வே நிர்வா கம் உத்தரவிட்டுள்ளது. வந்தே பாரத் ரயிலா, வந்தே ‘இந்தி’ ரயிலா? என்று கேள்வி எழுப்பி, சென்னை ரயில்வே கோட்டத்தின் இந்த முடிவை கண்டித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், உடனடியாக இந்தி திணிப்பு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுதொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி., தனது டிவிட்டர் சமூகவலைத்தளத்தில் வெளி யிட்டுள்ள பதிவில், “வந்தே பாரத் ரயிலா? வந்தே “இந்தி” ரயிலா? சீனியர் லோகோ பைலட்களையே புதிய ரயில் துவங்கும் போது பணியமர்த்துவது வழக்கம். ஆனால் பிரதமர் பங்கேற்கும் சென்னை - கோயம்புத் தூர் வந்தே பாரத் ரயிலுக்கு அந்த வழக் கத்தை மாற்றி இந்தி தெரிந்த ஓட்டுநர்களை பணியமர்த்த ரயில்வே நிர்வாகம் உத்தரவு. இந்தி தெரியாத காரணத்தால் சீனியர் லோகோ பைலட்கள் புறக்கணிப்பு. சென்னை ரயில்வே கோட்டத்தின் இந்த முடிவு கண் டிக்கத்தக்கது. உடனடியாக இந்தி திணிப்பு உத்தரவை ரத்து செய்க” என்று தெரிவித் துள்ளார். முன்னதாக, சென்னை - கோவை இடை யிலான ‘வந்தே பாரத்’ ரயில் சோதனை ஓட்டம் மார்ச் 30 அன்று நடைபெற்றது. அதன்படி, சென்னையில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்ட ரயில், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்கள் வழி யாக காலை 11.18 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. பின்னர், கோவை யில் இருந்து நண்பகல் 12.30 மணிக்கு இந்த ரயில் சென்னை புறப்பட்டுச் சென்றது. சென்னையிலிருந்து 5 மணி நேரம் 38 நிமிடங்களில் இந்த ரயில் கோவை வந்து சேர்ந்தது. ரயில்வே அட்டவணையில் இந்த ரயில் கோவை வந்து சேர 6 மணி நேர இடை வெளி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் பராமரிப்புப் பணிகள் கோவையில் உள்ள பணிமனையில் மேற்கொள்ளப்பட உள்ளன. தமிழகத்துக்கு உள்ளேயே இயக்கப் படும் முதல் ‘வந்தே பாரத்’ ரயில் இதுவாகும். தென்னிந்தியாவின் இரண்டாவது ‘வந்தே பாரத்’ ரயில் இது. முதல் ரயில் சென்னை - மைசூரு இடையே இயக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 8 அன்று பிரதமர் நரேந்திர மோடி இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.