districts

img

மதுரையில் மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த படிப்பக வளாகம் திறப்பு

மதுரை, ஜன.28- சு.வெங்கடேசன் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த படிப் பக வளாகம் சனிக்கிழமையன்று திறந்து வைக்கப்பட்டது. மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் தொகுதி மேம்  பாட்டு நிதி ரூ.30 லட்சம் மற்றும் மதுரை மாநகராட்சி நமக்கு நாமே  திட்டத்தில் ரூ.45 லட்சம் என  மொத்தம் ரூ.75 லட்சம் மதிப்பில் 31 ஆவது வார்டில் டாக்டர். தங்க ராஜ் சாலையில் மாநகராட்சி நீச்  சல்குளம் அருகே அரசுத் துறை  சார்ந்த போட்டித் தேர்வுகளில் பங்  கேற்கும் மாணவர்கள் படிப்பதற் காக ஒருங்கிணைந்த படிப்பக வளா கம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஜனவரி 28 சனிக் கிழமையன்று நடைபெற்றது. தமி ழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜன், பத்திரப்பதி வுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்  சு.வெங்கடேசன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எஸ் . அனீஷ்  சேகர், சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி, மேயர் வ.இந்திராணி பொன்  வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரான்ஜீத்சிங், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத்தலைவர் அ.சரவணபுவனேஸ்வரி, மாமன்ற உறுப்பினர் வே.முருகன், நகரப் பொறியாளர் செ.அரசு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மா. கணே சன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜா. நரசிம்மன், டி. செல்வ ராஜ், வடக்கு பகுதிக்குழு செயலா ளர்கள் வி. கோட்டைச்சாமி, ஏ. பாலு  மற்றும் வாலிபர் சங்கம், மாணவர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  படிப்பக வளாகத்திற்கு வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சனதேவி என்ற மாணவி கூறு கையில், நான் கடலூரில் இருந்து வந்து இங்கு விடுதியில் தங்கி படிக்கின்றேன்.

தற்போது மாநக ராட்சி வளாகத்தில் தான் நானும் புதுக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டத்தை சுற்றியுள்ள மாணவி கள் சேர்ந்து படித்து வருகின்றோம். 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநகராட்சி வளாகத்தில் படித்து வருகிறார்கள். அங்கு சிறு சிறு இடையூறுகள் இருந்தாலும் படிப்ப தற்கு எந்த சிரமமும் இல்லை. ஆனால் இது போன்ற அமைதி யான சூழ்நிலை அங்கு இல்லை. இப்போது மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முயற்சியில் மாணவர்கள் படிப்ப தற்கான பூங்கா ஒரு அமைதியான  சூழலில் அமைத்துக் கொடுத்துள் ளார். இதற்காக வெங்கடேசன் எம்.பி.க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.  வெங்கடேசன் எம். பி., மாணவ, மாணவியர்களிடம் பேசுகையில், இங்கு அடிப்படை பிரச்சனைகள் மற்றும் வேறு இடையூறுகள் இருந்  தால் எங்களுக்கு தகவல் கொடுக்க மொபைல் எண்களை இங்கே எழுதி போடச் சொல்லியுள்ளோம். அது  மாணவர்களுக்கு பயன் உள்ளதாக  இருக்கும். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடனடி யாக செய்யுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் காவலாளி ஒருவரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என்று கூறி யுள்ளேன் என தெரிவித்தார்.