திருவில்லிபுத்தூர், ஏப்.23- திருவில்லிபுத்தூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யத்தில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர். இதுகுறித்து துணை இயக்குனர் கலுசிவலிங்கம் கூறுகையில், ‘எம்.புதுப்பட்டி, குன்னூர், தளவாய்புரம், ஜமீன்கொல்லங்கொண்டான் ஆரம்ப சுகாதார நிலை யங்களுக்கு தேசிய தர மதிப்பீட்டு சான்றிதழ் பெறப்பட்டுள் ளது. தற்போது திருவில்லிபுத்தூர் நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சான்று பெறுவதற்கான ஆய்வு பணிகள் நடைபெறுகிறது. இந்த சான்று பெறும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் சிறப்பு நிதி யாக வழங்கப்படுகிறது. இந்த நிதி மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை கட்டமைப்புகளை மேம் படுத்த முடியும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்க ளுக்கும் தேசிய தர மதிப்பீட்டு சான்று பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.