districts

img

கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி மாணவர்கள் மறியல்

நத்தம், ஏப்.20- திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இருந்து செல் லப்பநாயக்கன்பட்டி, மூங்கில்பட்டி வழியாக பட்ட ணம்பட்டிக்கு அரசு பேருந் துகள் இயக்கப்பட்டு வரு கின்றன.  இப்பேருந்துகள் கடந்த இரண்டு நாட்களாக மாலை வேளையில் இயக்கப்பட வில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி கிராமங்களை சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பேருந்துகளை காலை, மாலை வேளைகளில் இயக்கக் கோரியும், கூடுதல் பேருந்துகள் வேண்டியும் நத்தம்- மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.  சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், காவல் ஆய்வாளர் சரவணன் உள் ளிட்டோர் மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.