districts

மதுரை முக்கிய செய்திகள்

சாலையைக் காணவில்லை மாற்றுத்திறனாளிகள் புகார்

திண்டுக்கல், ஏப்.17 திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள மாவுத்தன்பட்டியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட சாலையைக் காணவில்லை. அதைக் கண்டுபிடித்துத் தர  வேண்டுமென திண்டுக்கல் ஆட்சியரிடம் கிராம மக்கள் மாற்றுத்திறனாளிகள் புகார் கொடுத்துள்ளனர்.  புகாரில், “மாவுத்தன்பட்டியில் 50-க்கும் மேற்பட்ட  மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இருபது ஆண்டுகளுக்கு  முன்பு கொடைரோட்டிலிருந்து மாவுத்தன்பட்டிக்கு சாலை  அமைக்கப்பட்டது. தற்போது அந்தச் சாலையைக் காண வில்லை. இது தொடர்பாக நிலக்கோட்டை வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனுக்கொடுத்தும் நட வடிக்கை இல்லை ஆட்சியர் இருபது ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலையை கண்டுபிடித்துத் தர வேண்டு மெனக் கேட்டுள்ளனர்”.

சாராபாய் விண்வெளி நிலையத்தை பார்வையிட மாணவி தேர்வு

திருவில்லிபுத்தூர், ஏப்.17- விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா வித்யாலயா பள்ளி மாணவி தேர்வு  செய்யப்பட்டுள்ளார்.    இளம் விஞ்ஞானிகள் பயிற்சித் திட்டத்தில் விருதுநகர் மாவட்டம் திவில்லிபுத்தூர் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவி கவின் கிருஷிகா தேர்வாகியுள்ளார். இதன் மூலம் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் ராக்கெட் தொழில்  நுட்பங்கள் பார்வையிட ஐ எஸ் ஆர் ஒ இ நிர்வாகம் மே  14-ஆம் தேதி முதல் மே 26-ஆம் தேதி வரை அனுமதித்  துள்ளது.

விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

திருவில்லிபுத்தூர், ஏப்.17- கலசலிங்கம் சட்டக் கல்லூரியில் சட்டக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான சமரச நாள் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. தொடர்ந்து சட்ட  விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்களை சட்டப் பணி கள் ஆணைக்குழுவின் செயலாளர் வழங்கினார். சமரச பட்டியல் வழக்கறிஞர்கள் கருத்துரை வழங்கினர்.

பாலியல் தொல்லை: 5 ஆண்டு சிறை

திருவில்லிபுத்தூர், ஏப்.17- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாலவ நத்தம் பகுதியை சேர்ந்தவர் போஸ் (62). இவர் கடந்த  2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி எட்டு வயது மாண வியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரில் அருப்புக்கோட்டை மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து போஸை கைது செய்தனர். இந்த வழக்கு திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவ டைந்ததால் போஸூக்கு ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை  விதித்து நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் தீர்ப்பளித்தார்.

அங்கன்வாடி ஊழியர் தற்கொலை 

தேனி, ஏப்.17- தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலனி 5-ஆவது தெருவைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி (38). இவர்  சீப்பாலக்கோட்டை அங்கன்வாடி மையத்தில் ஆசிரிய ராகப் பணிபுரிந்து வந்தார். கணவர் கடந்த மூன்று வரு டங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இவ ரது மகன் சந்துரு (19) கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருநங்கையாக மாறி விட்டார். இவர்களது வீட்டுக்கு அருகில் வசிக்கும் பாண்டி, அவரது மனைவி ஆகியோர் முருகேஸ்வரியை தரக்குறைவாகப் பேசி  வந்துள்ளார். இது குறித்து கோயம்புத்தூரில வசிக்கும்  தனது மகனிடம் முருகேஸ்வரி கூறி அழுதார். அவர் சமா தானப்படுத்திய நிலையில் மனவேதனையில் இருந்த முருகேஸ்வரி தனது வீட்டில் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். சின்னமனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அனுமதியின்றி குடும்பக்கட்டுப்பாடு’ மருத்துவர்கள் எடுத்தது சரியான முடிவு: டீன்

மதுரை, ஏப்.17- மதுரை மேலூர் முஹம்மதியாபுரம் பகுதியை சேர்ந்த  அப்சர் உசேன் மனைவி ஆஷிசாபானு. இவர்  ஞாயிறன்று  இரவு பிரசவத்திற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் திங்களன்று  அதிகாலை 4.30 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆஷிசாபானுவிற்கு குழந்தை பிறந்துள்  ளது. தொடர்ந்து அவரது சம்மதம் இல்லாமல் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதற்கு  உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தோடு சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யுள்ளனர். இப்பிரச்சனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனை முதன்மையர் ரத்தினவேல், “ஆசிபா பானுவின் கருக்குழாயில் நீர்க்கோர்த்து இருந்தது. உயி ருக்கு ஆபத்தான நிலையில்  இருந்ததால் மருத்துவர்கள் ஆலோசித்துதான்  அறுவை சிகிச்சைமேற்கொண்டனர். தகவல் தொடர்பில் பிரச்சனை இருந்துள்ளது.  குழந்தை யைக் காப்பாற்ற இந்த அறுவை சிகிச்சை தான் நல்ல முடிவு.  இனி குழந்தை பிறக்காது. ஆனால். பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என்றார்.

தனியார் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

திருவில்லிபுத்தூர், ஏப்.17- திருவில்லிபுத்தூர் அருகே உள்ள தனியார் கல்வி நிறு வனத்தில் (கலசலிங்கம் பல்கலை கழகம்) கடந்த 2007- ஆம் ஆண்டு கல்வியியல் கல்லூரி தொடங்கப்பட்டது. 2020-ம்  ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழ கம் இந்த கல்லூரி உட்பட தமிழகத்தில் உள்ள 71 பி.எட்  கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. விதிகளை மீறி இந்தக் கல்லூரிகளில் சேரும் மணவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பொறுப்பு ஏற்காது என அறிவிக் கப்பட்டது.  இந்தக் கல்லூரியில் 2021-2022 கல்வி ஆண்டில் பி.எட்  படிப்பில் சேர்ந்த 100 மாணவர்கள் தற்போது இரண்டாம்  ஆண்டு படித்து வருகின்றனர். மாணவர் சேர்க்கைக்கு ஒப்பு தல் கிடைக்காததால் முதலாம் ஆண்டுக்குரிய தேர்வு நடத்தவில்லை.  மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க கோயில் கல்லூரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த  உயர்நீதிமன்றம் கல்லூரிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்  தது. மேலும் மாணவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவினர் நிர்வாகத்திடம் இருந்த பெற்று திருப்பி வழங்க உத்தரவிட்டது.  இந்த நிலையில் கல்லூரி நுழைவு வாயில் முன் மாண வர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொட்டை முந்திரியை அரசே கொள்முதல் செய்யக் கோரிக்கை

கடமலைக்குண்டு, ஏப்.17- தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பளவில் கொட்டை முந்திரி  விவசாயம் நடைபெற்று வருகிறது. நான்கு மாதங்க ளுக்கு முன்பு பெய்த சாரல் மழையால் மரங்களில் பூ, பிஞ்சுகளின் உற்பத்தி அதிகரித்து காணப்பட்டது. கடந்த இரண்டு மாதமாக மழை பெய்யாததால் தற்போது கொட்டை முந்திரியின் உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வருடம் ரூ.60 வரை மட்டுமே விற்பனையாகி வந்த கொட்டை முந்திரி தற்போது ரூ.90 வரை விற்பனையாகிறது. இதனால் கொட்டை முந்திரியை பறிக்கும் பணிகளில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வருகின்றனர்.  இது குறித்து விவசாயிகள் கூறுகையில் சீசன் தொடங்கிய முதல் வாரத்திலேயே கொட்டை முந்திரி  ரூ.90 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இந்தாண்டு உற்பத்தி அதிகளவில் உள்ளது. விலையில் மாற்ற மில்லாமல் இதே நிலை நீடித்தால் லாபம் கிடைக்கும்.  கடந்தாண்டு விலை குறைவால் விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு நஷ்டத்தை  ஈடு செய்யும் வகையில் கொட்டை முந்திரியின் விலை யை மேலும் அதிகரிக்க வேண்டும். இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் உரிய விலை நிர்ணயம் செய்து அரசே கொட்டை முந்திரியை கொள்முதல் செய்ய வேண்டுமென்றனர்.

பதிவாளர் பணி நீட்டிப்புக்கு எதிர்ப்பு காந்திகிராம பல்கலை.யில் போராட்டம்

திண்டுக்கல், ஏப்.17- திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் பல்கலை கழகத்திற்கு நிரந்தரப் பதிவாளரை நியமிக்க வேண்டு மென வலியுறுத்தி பல்கலைக்கழக பேராசிரியர் சங்கத்தினர் திங்களன்று கருப்புப்பட்டை, முகக்கவ சம் அணிந்து போராட்டம் நடத்தினர். போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  பேராசிரியர் சங்கத் தலைவர் ராஜா (எ) பிரான்  மலை, “இரண்டாவது  முறையாக பல்கலைப்பதிவா ளருக்கு பதவி நீட்டிப்பு செய்ததை ரத்து செய்ய வேண்  டும், பல்கலைக்கழகத்திற்கு நிரந்தரப் பதிவாளரை நியமிக்க வேண்டும். நிர்வாககுழு, திட்டமிடல் மற்றும்  கண்கானிப்புகுழு, கல்வியியல் குழு, நிதிக்குழு ஆகி யவற்றின் கூட்டங்களை தொடர்ந்து நடத்த வேண்டும், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்கத்திற்கு தேவை யான நிதியை முறையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  பேராசிரியர்களின் குடியிருப்புகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றார்.

பெரியகுளம் கலவரம் குறித்து விசாரிக்க நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தேனி, ஏப்.17-  பெரியகுளத்தில் ஏப்ரல் 14- ஆம் தேதி  ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து காவல்  நிலையம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பணியில் இருக்கும் நீதிபதி யை கொண்டு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது . இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி. அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கை:-  தேனி அருகே உள்ள அரசு சட்டக் கல்லூரியில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது உரு வப்படம் வைக்கப்பட்டிருந்தது. இதை  விரும்பாத அங்கிருந்த சங் பரிவாரின் ஏபி விபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் அம்பேத்  கரின் உருவப் படத்தைக் கிழித்து அட்டூழி யத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக வீரபாண்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இதுவரை நடவடிக்கை இல்லை. பெரியகுளத்தில் காவல் துறையினர்  நிர்ணயித்திருந்த நேரத்தில் டி.கள்ளிப்பட்டி கிராம மக்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை  அணிவிக்கச் சென்றனர்.

அப்போது பெரிய குளம், தண்டுப்பாளையம் அருகே சிலர் மறைந்து நின்று கூட்டத்தில் கல்வீசி தாக்கிய தாகக் கூறப்படுகிறது .இதன் பின்னணியில்  பாஜகவினர் உள்ளதாக பொதுமக்களிடம் கருத்து வந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி விக்கச் சென்றவர்கள் மீது திடீர் தடியடி  நடத்தியதால் கலவரம் ஏற்பட்டது. இதில்  காவல் நிலையம் மீதும், காவல்துறை வாக னம், அவசர ஊர்தி மற்றும் இருசக்கர வாக னங்கள் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை, வீடியோ பதிவுகளை ஆய்வு  செய்து முறையாக அடையாளம் காணா மல், டிகள்ளிப்பட்டியைச் சேர்ந்த இளை ஞர்கள், மாணவர்கள், அம்பேத்கர் பிறந்த  நாள் விழாவை காண்பதற்கு கூடியிருந்த மக்களையும் கைது செய்யும் நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை  நடத்தி, உண்மையானக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும். கிராமத்தையே சிறையில் அடைக்க காவல்துறை முயல் வது ஜனநாயகத்திற்கு விரோதமானது. பெரியகுளம் பேரணி அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும்  நிகழ்ச்சியில் நடைபெற்ற அனைத்துச் சம்ப வங்கள் குறித்தும் பணியில் இருக்கும் நீதி பதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்.காவல்  துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையில்  ஏற்பட்ட இந்த மோதலின் உண்மைத்தன்  மையை, அதன் காரணங்களை கண்டறிய  தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும். பாதிக்  கப்பட்ட அப்பாவி மக்களை, இளை ஞர்களை, பெண்களை தாக்குவதையும் சிறையில் அடைப்பதையும் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.