districts

img

கூரைக்குண்டு ஊராட்சியில் அடிப்படை வசதி கோரி போராட்டம்

விருதுநகர், ஜூன் 26- கூரைக்குண்டு ஊராட்சியில் அடிப்படை வசதி கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் அருகே உள்ளது  கூரைக்குண்டு ஊராட்சி. இங்குள்ள எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கழிவு  நீர் செல்ல முறையான வாறுகால் வசதி இல்லை. சாலை மற்றும் தண்ணீர்தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. பொது மயானத்திற்கு செல்ல சாலை வசதி மற்றும் தெரு விளக்கு வசதி செய்து தர வேண்டும் என  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கிளைச் செயலாளர் செல்வக்குமார் தலைமை வகித்தார். நகர் செய லாளர் எல்.முருகன், மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் நகர்க்குழு உறுப்பினர் பாலமுரு கன், பாலு உட்பட பலர் பங்கேற்ற னர்.