மதுரை, ஜூன் 11- மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு நிதியிலி ருந்து மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட செல்லூர் 23 ஆவது வார்டு 50 அடி சாலை மற்றும் பாக்கியநாதபுரம் ஆகிய பகுதிகளில் உயர் மின்கோபுரம் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டிலும் 22 ஆவது வார்டு தத்தனேரி - ஆரப் பாளையம் இணைப்பு பாலத்தில் சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலும் அமைக்கப்பட்டது. இதனை நாடாளுமன்ற உறுப்பி னர் சு. வெங்கடேசன் சனிக்கிழமை யன்று துவக்கி வைத்தார். இதில் துணை மேயர் டி. நாகராஜன், மண்டல தலைவர் சரவண புவ னேஸ்வரி, மாமன்ற உறுப்பினர்கள் டி.குமரவேல், மகாலட்சுமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பி னர் இரா. விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா. நர சிம்மன், வடக்கு - 1 பகுதிக்குழு செய லாளர் வி. கோட்டைச்சாமி, வடக்கு - 2 பகுதிக்குழு செயலாளர் ஏ. பாலு, மாவட்ட குழு உறுப்பினர்கள் என். ஜெயச்சந்திரன், கே. அலாவுதீன் மற்றும் மாநகராட்சி செயற்பொறி யாளர் அரசு, மண்டல செயற்பொறி யாளர் வரலெட்சுமி உள்பட மாநக ராட்சி அதிகாரிகள் சிபிஎம், திமுக கட்சியினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.