districts

img

மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் மறியல்

திண்டுக்கல், டிச.14- மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும்.  கடும்  ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான நலச்சங் கத்தின் சார்பில் டிசம்பர் 14 செவ்வாயன்று தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது.   திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவல கம் முன்பாக நடைபெற்ற மறியலுக்கு உயரம் தடைபட்டோர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அப்பு  தலைமை வகித்தார்.  

புறநகர் செயலாளர் ஏ.ஸ்டாலின், புறநகர் துணைத்தலைவர் தெரஸ்ஜெனவா, நகரத்துணைத்தலைவர் ஜெயந்தி, நகர இணைச்செயலாளர் ராஜேந்திரன்  உள்பட 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று கைதாகினர்.  செம்பட்டியில் நடைபெற்ற மறிய லுக்கு  ஆத்தூர் ஒன்றியச்செயலாளர் ஆறு முகவள்ளி தலைமை வகித்தார். மாவட் டத்தலைவர் செல்வநாயகம், ஆத்தூர் ஒன்றியச்செயலாளர் வனிதா, இணைச் செயலாளர் மலைச்சாமி, பொருளாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.147 பேர் கைது செய்யப்பட்டனர். ரெட்டியார்சத்திரம் மறியல் போராட் டத்திற்கு ஒன்றியச்செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் கோபிநாதன், ஒன்றிய துணைத்தலைவர் கே.எஸ்.பழனிச்சாமி,  பொருளாளர் முத்தையா உள்பட 200 பேர் கைது செய் யப்பட்டனர். மாவட்ட செயலாளர் பகத்சிங் தலை மையில் பழனியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 342 மாற்றுத்திறனாளி களும், மாவட்ட பொருளாளர் காளீஸ்வரி தலைமையில் ஒட்டன்சத்திரத்தில் நடை பெற்ற மறியல் போராட்டத்தில் 130 மாற்றுத் திறனாளிகளும், வடமதுரை ஒன்றிய செய லாளர் முத்துப்பாண்டி தலைமையில் வட மதுரையில் நடைபெற்ற மறியல் போராட் டத்தில் 160 மாற்றுத்திறனாளிகளும், சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் சின்ராஜ் தலைமையில் சாணார்பட்டியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 140 மாற்றுத்திறனாளிகளும், நிலக்கோட்டை ஒன்றிய தலைவர் செல்லத்துரை தலை மையில் நிலக்கோட்டையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 114 மாற்றுத்திறனா ளிகளும், திண்டுக்கல் நகர செயலாளர் ஸ்டாலின் தலைமையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 55 மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு கைதாகினர். 

மதுரை

மதுரையில் மாவட்டத் தலைவர் டி. நாகராஜ் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தை சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.தெய்வராஜ் துவக்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர்  பி. வீரமணி , மாவட்ட  நிர்வாகிகள் டி. குமர வேல், ஏ. பாண்டி ஆகியோர்  பேசினர்.  மாவட்ட பொருளாளர் வி. மாரியப்பன் , மாவட்ட நிர்வாகிகள் எல். தங்கவேல் , பா. பழனியம்மாள் , பி. மனோகரன் , வனிதா,  ஏ. பாலமுருகன் , எம். சொர்ணவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  மறிய லில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் நான்கு மையங்களில் மறியல் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏ.குமரேசன் தலைமை யேற்றார். இதில் மாவட்ட நிர்வாகிகள் கே.ஆரோக்கியராஜ்,  அழகுராணி, ஸ்ரீதேவி,நடராஜ் உட்பட பலர் பங்கேற் றனர்.  போராட்டத்தில் கலந்து கொண்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

வத்திராயிருப்பு பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற மறியலுக்கு மாவட்ட செயலாளர் கே நாகராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் அல் போன்ஸ், செயலாளர் கணேசன், பொரு ளாளர் பழனிசாமி, தாலுகா நிர்வாகிகள் முகேஷ், சங்கரேஸ்வரி  உள்பட 66 பேர் கலந்து கொண்டனர் . ராஜபாளையத்தில் மாவட்ட பொருளாளர் சுந்தரபாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் சுப்பிரமணி, பாக்கியராஜ், வீரமணி, சரவணன், கிருஷ் ணன் உட்பட 38 பேர் கலந்து கொண்ட னர்.  மறியலை ஆதரித்துப் சிபிஎம் நகரச்  செயலாளர் மாரியப்பன் பேசினார். திரு வில்லிபுத்தூரில் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியலுக்கு தாலுகா பொருளாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார்.சங்க நிர்வாகிகள் மீனா வேல் சாமி கோவிந்தராஜ் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.  அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் பாலகிருஷ்ணன், சிபிஎம் நகரச் செயலாளர் ஜெயக்குமார்  ஆகியோர் ஆதரித்துப் பேசினர்.

சிவகங்கை 

சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறி யலுக்கு மாவட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார் . மாவட்ட செயலாளர் முத்துராம லிங்க பூபதி, மாவட்ட துணைத்தலைவர் கள் மலர்விழி, மாவட்ட துணைச் செயலா ளர் திருநாவுக்கரசு, மாவட்ட பொருளாளர் செந்தில், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, பூமிநாதன், கொங்கையா ஆகியோர் பேசினர்.