சென்னை,அக்.6- ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக எம்.பி. கனி மொழியை நியமித்து ஒன்றிய பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரும், திமுக தலை வருமான மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து, கனிமொழி வாழ்த்து பெற்றார். மக்களவை உறுப்பினர்கள் 17 பேரும், மாநிலங்க ளவை உறுப்பினர்கள் 10 பேரும் இந்த ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்க ளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலைக்குழு வின் தலைவராக திமுக எம்.பி. கனிமொழி நியமிக்கப்பட்டி ருக்கிறார்.