districts

img

போடி -தேனி அகல ரயில் பாதையில் ஊழியர்கள் பணி ஒத்திகை

தேனி, மார்ச் 30- போடியில் வியாழக்கிழமை 12 பெட்டிகளுடன் கூடிய  சோதனை ஓட்டமாக வந்த ரயி லில் ஊழியர்கள் பணி ஒத்திகை மேற்கொண்டனர். போடி-மதுரை அகல ரயில் பாதை பணிகள் முடிந்து தேனி- மதுரை இடையே ரயில் சேவை  நடைபெற்று வருகிறது. இதில் மீத முள்ள போடி-தேனி வரையி லான பணிகள் முடிந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு  செய்தார். இந்த ஆய்வு நடை பெற்று மூன்று மாதங்களுக்குள் ரயில் சேவை தொடங்கியிருக்க வேண்டும். மதுரை ரயில் நிலை யத்தில் விரிவாக்க பணி நடை பெற்றதால் போடி-மதுரை இடையே ரயில் சேவை தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் வியா ழக்கிழமை பணியாளர்களுக் கான சிறப்பு ரயில் தேனியிலி ருந்து போடிக்கு இயக்கப்படுவ தாக அறிவிக்கப்பட்டது. இதில் போடியில் பணிபுரிய உள்ள ரயில்வே பணியாளர்கள், அதி காரிகள் உள்ளிட்டோர் பயணம் செய்து ரயில் நிலையத்தில் பணி ஒத்திகை பார்க்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேனி ரயில் நிலை யத்திலிருந்து 12 பெட்டிகளுடன்  கூடிய ரயில் மட்டும் இயக்கப் பட்டது. மதுரையிலிருந்து தேனி வந்த ரயிலை போடி வரை இயக்கி சோதனை செய்தனர். இந்த ரயிலில் பணியாளர்கள் யாரும் வரவில்லை. போடிக்கு வந்த ரயில் 20 நிமிடம் மட்டும் நின்றது. பின்னர் மீண்டும் போடி யிலிருந்து புறப்பட்டு தேனிக்கு சென்றுவிட்டது. மாலை வரை ரயில் நிற்கும், ரயில்வே பணியா ளர்கள் வருவார்கள் என எதிர்  பார்த்த பொதுமக்கள் ஏமாற்றம டைந்தனர். இதுவரை 17 ரயில் என்ஜின் கள் மூலம் போடி-தேனி, போடி-மதுரை இடையே சோதனை செய்யப்பட்ட நிலையில் தற் போது முதல் முறையாக பெட்டி களுடன் கூடிய ரயில் சோதனை  செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே வட்டாரங்க ளில் கேட்டபோது, ரயில் பணி யாளர்கள் வந்து சோதனை செய்  வதாகவே இருந்தது. ஆனால் ரயில் பணியாளர்கள் மாலை வரை தங்கி பணியாற்ற தேவை யான குடிநீர், கழிப்பறை வசதி கள் தயாராகாததால் அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் ஆய்வு செய்து 3 மாதம் முடியும் நிலை உள்ளதால் இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட்டு அனுமதி புதுப்பிக்கப்பட்டுள்ளது என தெரி வித்தனர்.