தேனி,ஜன.4- தேனி மாவட்டம், கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் கருத்தரங்கம் நடை பெற்றது. கருத்தரங்கிற்கு முதல்வர் ஜி.ரேணுகா தலைமை வகித்தார். உதவிப் பேராசிரியை க.விஜயா வரவேற் றார். கல்லூரி இணைச் செயலர் ஆர்.வசந்தன், ஒருங்கி ணைப்பாளர் வைஷ்ணவி ஆகியோர் வாழ்த்துரை யாற்றினர். உத்தமபாளையம் அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.முத்துக் குமார் கருத்துரையாற்றினார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளில் தமிழ் பாடத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்து வம், அதிக மதிப்பெண் பெறும் விதம் குறித்து விளக்கப் பட்டது.