மதுரை, ஜூலை 1- முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில் மதுரை மாநகராட்சி ஈ.வெ.ரா. பெண்கள் மேல்நிலைப்பள்ளி யில் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டியை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் கே.ஜே. பிரவீன்குமார் ஆகியோர் ஜூன் 30 அன்று துவக்கி வைத்த னர். பள்ளி வளாகத்தில் பூச்செடிகளை நட்டு வைத்தனர். மதுரை மாநகராட்சி 27 நடுநிலைப்பள்ளிகள், 24 உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது. இந்த பேச்சுப்போட்டியில் 152 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச் செல்வி, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மாமன்ற உறுப்பினர் நூர்ஜஹான், தலைமை ஆசிரியை ஆர்.கிருஷ்ணகுமாரி, பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.