தேனி, ஜூன் 24- தேனி மாவட்டம், முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர் களின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் ஜூன் 24 அன்று பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு பன்னோக்கு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. பெரியகுளம், சருத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடை பெற்ற முகாமினை சட்டமன்ற உறுப் பினர் கே.எஸ்.சரவணக்குமார், முன்னிலையிலும் மற்றும் ஆண்டிப் பட்டி, சக்கம்பட்டி இந்து மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமினை சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் முன்னிலையிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது, மருத்து வக் கல்லூரி முதல்வர் மரு.மீனாட்சி சுந்தரம், இணை இயக்குநர் மருத் துவ நலப்பணிகள் (பொ) மரு. அன்புச்செழியன், துணை இயக்கு நர் (சுகாதாரப் பணிகள்) மரு. போஸ்கோ ராஜா, ஆண்டிபட்டி பேரூ ராட்சி தலைவர் சந்திரகலா உட்பட பலர் உள்ளனர்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டையில் முன் னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச பன்னோக்கு சிறப்பு மருத் துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை வருவாய் மற் றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். பின்பு, முகாமில் வழங்கப்பட்டு வரும் மருத்துவ பரிசோதனைகள், சிறப்பு ஆலோசனை, சிறப்பு சிகிச் சைகளை பார்வையிட்டார். மேலும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் மகப்பேறு திட் டத்தின் கீழ் 10 தாய்மார்களுக்கு தாய், சேய் நலப்பெட்டகம் மற்றும் சித்த மருத்துவத்தின் சஞ்சீவி பெட்ட கங்களையும் வழங்கினார். அத னைத் தொடர்ந்து, மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 10 பய னாளிகளுக்கு மருந்துப்பெட்ட கங்களையும், 5 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அடையாள அட்டைகளை யும், குடும்பக்கட்டுப்பாடு செய்த வர்களுக்கு பரிசுகளையும் அமைச் சர் வழங்கினார். மேலும் இதில், இணை இயக்கு நர்(பொது மருத்துவம்) சண்முக சுந்தரம், கோட்டாட்சியர் கணேசன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணி கள்) யசோதாமணி, நகர்மன்றத் தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிர காசம், ஒன்றியக்குழுத்தலைவர் சசி கலா பொன்ராஜ் உட்பட பலர் பங் கேற்றனர்.
மதுரை
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு. மாநகராட்சி வெள்ளிவீதி யார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி யிலும், கே.கே நகர். அருள் மலர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும் முகாம்கள் நடைபெற் றது மேயர் வ. இந்திராணி, வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தள பதி ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் 58 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னி யம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், திருப் பத்தூர் வட்டாரத்தில் உள்ள லிம்ரா மெட்ரிக்குலேசன் பள்ளியில் இல வச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சித்தலை வர் ஆஷா அஜித் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் துவக்கி வைத்தார். இம்முகாமில், 27 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் சஞ்சீவிப் பெட்டகங்களையும், 04 பயனாளி களுக்கு இலவச கண் கண்ணாடி களையும் கூட்டுறவுத்துறை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.விஜய்சந்திரன், திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவர் கோகிலா ராணி, ஒருங்கிணைப்பாளர் (என்.ஹெச்.எம்.) மரு.விக்னேஷ் மற்றும் வட்டார மருத்துவ அலு வலர்கள், செவிலியர்கள், பொது மக்கள், உள்ளாட்சி அமைப்புக் களை சார்ந்த பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.