districts

img

மானாமதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் முகாம்

 சிவகங்கை, ஏப்.8-  சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில்  அவர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்  மானா மதுரை வட்டாட்சியர் சாந்தி  தலைமையில் நடைபெற்றது. இதில் மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் பேசுகையில், முகாமில் மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடை யாள அட்டை வழங்கப்பட் டது. ஆதார் அட்டை பதிவு  செய்யப்பட்டது. தமிழக முதல்வரின் விரிவான மருத் துவக் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்பட்டது. துறைகளில் செயல்படுத் தப்படும் திட்டங்களுக்கான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. உதவி உபகர ணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்  ளப்பட்டது .வங்கி கடன்  உதவி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  மாற் றுத்திறனாளி களுக்கான நலத்துறையின் பராமரிப்பு உதவித்தொகை வழங்கவும்  வருவாய்த் துறையின் மூலம் உதவித்தொகை வழங்க வும் நடவடிக்கை மேற்கொள்  ளப்பட்டது என்று தெரி வித்தார். மேலும் பல்வேறு நலத்  திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. இவ்விழாவின் முடி வில் மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் தனது பிறந்த நாளை முன்னிட்டு அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்  கூடியிருந்தவர்கள் மத்தி யில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினார். திமுக  நகர் செயலாளர் பொன்னுச் சாமி, ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் முத்துச்சாமி, இளையான் குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதியரசன், கண்ணமங்கலம் கூட்டுறவு வங்கி தலைவர் தமிழரசன், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஷ்முதீன்,  பேரூ ராட்சி செயல் அலுவலர் கோபிநாத், மேலப்பசளை ஊராட்சித் தலைவர் சடை யப்பன், மாங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் தேசிங்கு ராஜா  உள்ளிட்டோர்  சட்டமன்ற உறுப்பினருக்கு வாழ்த் துக்களை தெரிவித்தனர்.