districts

img

வடக்கு பச்சையாறு அணையில் பாசனத்துக்கு தண்ணீர்:

திருநெல்வேலி, ஜூன் 29- வடக்கு பச்சையாறு அணையில் இருந்து சபாநாயகர் அப்பாவு  பாசனத் துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். இதன்மூலம் 2,028 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.  நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வடக்கு பச்சையாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 50 அடி ஆகும். இந்த அணையின் மூலம் களக்காடு, நாங்குநேரி பகுதியில் உள்ள 110 குளங்கள் பயன்பெற்று வரு கின்றன. களக்காடு பகுதியில் பெய்த வடகிழக்கு பருவமழையால் கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி பச்சையாறு அணை நிரம்பி மறுகால் பாய்ந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 21.25 அடியாக உள்ளது.  இந்த நிலையில் அணையில் இருந்து பயிர் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் படி சபாநாயகர் அப்பாவு செவ்வாயன்று அணையில் இருந்து தண்ணீரை திறந்து  வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘மடத்துக்கால், பச்சையாறு கால்வாய் களில் வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் 2,028 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்’ என்றார்.  நிகழ்ச்சியில், சேரன்மாதேவி உதவி ஆட்சியர் ரிஷாப், நாங்குநேரி தாசில் தார் இசக்கிப்பாண்டி, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் மணி கண்டராஜ், உதவி பொறியாளர் பாஸ் கர், களக்காடு யூனியன் தலைவர் இந்திரா ஜார்ஜ்கோசல், நாங்குநேரி ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;