districts

img

தென் மாவட்டங்களில் 917 கஞ்சா வியாபாரிகள் கைது

மதுரை, ஜூன் 26- தென் மாவட்டங்களில் 917 கஞ்சா  வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ள னர். சுமார் ரூ.14 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தென்மண்டல காவல்துறைத் தலை வர் அஸ்ராகார்க் தெரிவித்தார். போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்ப தில் சிறந்த- குறிப்பிடத்தக்க பணிக் காக தென் மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் முதலமைச்சரின் பதக்கத்தைப் பெற் றுள்ளனர். 2023 ஆம் ஆண்டுக்கான சர்வ தேச போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது அறிவித்துள்ளார். விருதாளர் களில் தென்மண்டல் காவல்துறைத் தலைவர், ஆஸ்ரா கர்க் மற்றும் தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ் ஆகி யோரும் அடங்குவர். பதக்கம் பெற்ற காவல்துறைத் தலைவர் அஸ்ரா கார்க் கூறியதாவது: 2023-ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி  ஐந்து மாதங்களில் கஞ்சா  விற்பனை தொடர்பாக பதிவு செய்யப்  பட்ட 469 வழக்குகளில் 917 கஞ்சா  வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கஞ்சா கடத்தலுக்கு எதிரான நட வடிக்கைகள் வெறும் வழக்குப் பதிவு, குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்தல், கஞ்சாவைக் கைப்பற்றுதல் ஆகியவற்றோடு நின்றுவிடவில்லை. கஞ்சா கடத்துபவர்களுக்கு எதிரான  நடவடிக்கையை தீவிரப்படுத்த, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும்  குற்றவாளிகளும் அடை யாளம் காணப்பட்டனர்.

அவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்துடன், குற்றம்  சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்க ளது நெருங்கிய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக் கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2022-ஆம் ஆண்டு முதல் குற்றம் சாட்டப்பட்ட 13 பேர் மற்றும் அவர்களது உறவினர்களுக்குச் சொந்தமான 44 வீடுகள், 26 மனை கள், நிலங்கள், ஐந்து கடைகள் உள்ளிட்ட ரூ.14 கோடி மதிப்புள்ள  சொத்துக்களைக் கைப்பற்றுவதற் கான முயற்சிகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது. கஞ்சா தொடர்பான பிற வழக்கு களில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 102-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் சந்தே கத்திற்கிடமான வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. பத்து தென் மாவட்டங்கள் மற்றும்  திருநெல்வேலி காவல் ஆணைய ரகத்தின் எல்லைக்கு உட்பட்ட 1,316 கஞ்சா வழக்குகளில் 2,448 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.  71 கஞ்சா வியாபாரிகள் மீது  குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததோடு, தென் மாவட்டங்களுக்கு கஞ்சா கடத்தியதற்காக பிற மாநிலங்க ளில் இருந்து 20 பெரிய கஞ்சா வியா பாரிகள் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற விசாரணையின்போது கஞ்சா வழக்குகளை முறையாகப் பின்தொடர்ந்ததன் மூலம் 2023- ஆம் ஆண்டு மே மாதம் வரை 684  வழக்குகளில் தண்டனை பெற்றுத்தரப்  பட்டுள்ளது என்றார்.