மதுரை, ஜூன் 26- மதுரை மாநகராட்சியின் 19-ஆவது மாமன்றக் கூட்டம் மேயர் வ.இந்திராணி தலைமையில் நடை பெற்றது. ஆணையாளர் பிரவீன் குமார், துணை மேயர் டி.நாக ராஜன் உள்ளிட்ட மாமன்ற உறுப்பி னர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது: மண்டலத் தலைவர் -1 தலைவர் வாசுகி: மண்டலங்களுக்கென்று சிறப்பு நிதி என்பது இருந்தால் அடிப்படை தேவைகளைப் பற்றி மன்றத்தில் பேச வேண்டிய நிலை இருக்காது. அந்த நிதியிலிருந்து சில திட்டங்களை செயல்படுத்திக் கொள்வோம். சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கிறீர்கள். பிடிக்கப்படும் மாடுகள் மறு நாளே சாலையில் சுற்றித்திரிகின்றன. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் தாம தமாக செயல்படுவது போல் உள் ளது. இதனால் பாதாளச் சாக்கடைப் பணிகளும் பாதிக்கப்படுகிறது எனவே பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். மண்டலம் 2 தலைவர் சரவண புவனேஸ்வரி: நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. நோய்த் தொற்று பரவிய நாய்கள் நிறைய தெருக் களில் திரிகின்றன. மாநகராட்சியில் ரூ.600 கோடி வரி பாக்கி உள்ள நிலையில் பல திருமண மண்டபங் கள், மிகப்பெரிய கட்டடங்களில் இருந்து வரி வசூலிக்கப்பட வில்லை. பல திருமண மஹால்கள் பல நூறு கோடி ரூபாய் வரி பாக்கி செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், தூய்மை பரிகார சான்றி தழ் வழங்கப்படுகிறது. இது விதி களை மீறுவதாகும். மண்டலம்-3 தலைவர் பாண்டி செல்வி: ஆரப்பாளையம் பேருந்து நிலையம் மேலவாசல் பகுதிகளின் சீரமைப்பிற்காக நிதி ஒதுக்கப் பட்டது ஆனால் இதுவரை பணி கள் நடைபெறவில்லை. மண்டலம்-4 தலைவர் முகேஷ் சர்மா: மாமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகம் இல்லை தொடர்ந்து புகார் வந்து கொண்டிருக்கிறது மாமன்ற உறுப்பினர்களுக்கு விரைவில் மாமன்ற அலுவலகம் கட்டி தரவேண்டும்.
மல்: மண்டலத்துக்குட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் குறித்து கூறி வருகிறார்கள் அவற்றைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக மாமன்ற உறுப்பினர் சோலைராஜா: முல்லைப் பெரி யாறு கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணி கள் எவ்வளவு முடிந்துள்ளது. எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து எழுத்துப்பூர்வமாக அறிக்கை வைக்க வேண்டும். மதுரையில் 13 வாய்க்கால்கள் உள்ளது இவை அனைத்தும் தூர்வாரப்படாமல் உள்ளது. 23-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல்: வில்லா புரம் பகுதியில் மாநகராட்சி நடு நிலைப்பள்ளி தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது அதனை மாநக ராட்சிக்கு உட்பட்ட இடத்தில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் கட்டடம் கட்டினால் தனியாருக்குக் கொடுக்கும் வாடகை மிச்சமாகும். 96 96 மாநகராட்சிப் பள்ளிகளில் போதுமான தூய்மைப் பணியா ளர்கள், காவலர்கள் இல்லாத நிலை உள்ளது. மதுரை கோரிப்பாளையம் பொன்முடியார் தொடக்கப்பள்ளி யில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது ஐந்து வகுப்பறைகள் மட்டுமே உள்ளது ஒரு வகுப்பறைக்கு 50-க்கும் மேற் பட்ட மாணவர்கள் உள்ள நிலை யில் கூடுதல் கட்டடம் கட்டி மாண வர்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மாட்டுத்தாவணி அருகில் ரூ. 600 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட வுள்ள டைட்டல் பார்க் கட்டுமான பணிக்கான குழுவை அமைக்கும் போது அனைத்துக் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும்.
மதுரை மாநகரில் முல்லைப் பெரியாறு கூட்டுக் குழுவின் திட்டம் கீழ் குழாய் பதிக்கும் பணி நடை பெற்று வருகிறது பணியை கால தாமதமின்றி முடிக்க வேண்டும். 65-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சோலை செந்தில் குமார்: 63 முதல் 67 வரையிலான வார்டுகளில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர். ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநி யோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். துணை மேயர் நாகராஜன்: மண்டலத் தலைவர்கள் கூறும் புகாருக்கு மண்டல கூட்டங்களி லேயே தீர்வு காண வேண்டும் இல் லையென்றால் மாமன்றக் கூட் டத்தில் நேரம் விரயமாகும். ஒவ்வொரு மண்டல கூட்டத்திலும் மண்டலத் தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களிடம் அப் பகுதியில் உள்ள குறைகளை கேட்டு அங்கேயே அதற்கான தீர்வு காண்பது தான் சிறந்தது என்றார். மாநகராட்சியில் வரவு செலவு கணக்குக் குழு இதுவரை கூட வில்லை. பாதாளச் சாக்கடைப் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பத னால் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. குடிநீர்க் குழாயில் குடிநீர் சீராக வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரின் மையப் பகுதி யில் பல இடங்களில் பிரிட்டிஷ் காலத்தில் போடப்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. அவற்றைப் புதுப்பிக்க வேண்டும். சாலைகளை உடனடியாகச் சீர மைக்க வேண்டும் என பல மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.