பள்ளிபாளையம், ஜன.28- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். பகுதியில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ். இவர் தனியார் காகித ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சமூக ஆர்வலரான ஜெயபிரகாஷ் பழங்கால நாணயங் களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதுகுறித்து ஜெயபிரகாசிடம் கேட்டபோது, கடந்த மூன்று ஆண்டுகளாக பழைய நாணயங்களை, ரூபாய் தாள்களை சேகரித்து வருகிறேன். கடந்த 1918 ஆம் ஆண்டு வெளி யிடப்பட்ட நாணயங்கள் முதல், ஐந்து பைசா, பத்து பைசா, 20 பைசா, 25 பைசா நாணயங்கள் மற்றும் பழைய ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், வெளிநாட்டு நாணயங்கள், கரன்சி நோட்டு களை சேகரித்து வருகிறேன். அதேபோல ஐந்து ரூபாய் நாண யத்தின் பின்பகுதியில் ஏதேனும் தலைவர்கள் அறிஞர்கள் புகழ்பெற்றவர்களின் உருவங்கள் பொரித்த நாணயங் களையும் அதிகளவு பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். அடுத்த தலைமுறைக்கு நமது பழைய நாணயங்கள் பற்றிய புரிதலை எடுத்துக் கூறுவதற்காகவும், ஆர்வத்தின் காரணமாகவும் பழைய நாணயங்களை தொடர்ந்து சேகரித்து வருகிறேன். கூடுமானவரை பழங்கால நாணயங்கள் கிடைக்கும் பட்சத்தில், அதை அரசிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளேன் என்றார்.