districts

img

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ஜல்லிகட்டு காளைகள் ஆறாம் ஆண்டு திருவிழா

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ஜல்லிகட்டு காளைகள் ஆறாம் ஆண்டு திருவிழா நத்தம் காந்தியார் கலை அரங்கில் நடைபெற்றது. ஒருங்கிணைப்புக்குழு தமிழ்முகம் வரவேற்றார். திமுக நகர செயலாளர் ராஜ்மோகன், பேரூராட்சி துணை தலைவர் சரவணன். கவுன்சிலர் இஸ்மாயில், வெள்ளைச்சாமி, நெறியாளர் குழு அய்யனார், ஜல்லிகட்டு ஒருங்கிணைப்புக்குழு ராக்கன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பெ.ரத்தினகுமார் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு வேட்டி மற்றும் துண்டுகள் அணிவித்து நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். இதில் இருநூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைளுக்கு வேட்டி கைத்தறி துண்டுகள் அணிவிக்கப்பட்டன.பண்பாட்டு குழு உறுப்பினர்கள்   தேன் சேகர்,முருக மன்னர்,மகாலிங்கம், தென்னரசு, சுந்தரம், ஆகியோர் பங்கேற்றனர்.