districts

img

கீழாயூர் ஆதிதிராவிடர் மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி சிபிஎம் பெருந்திரள் முறையீடு

 சிவகங்கை, டிச 30 _ சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கீழாயூர் பகுதியில் குடியிருந்து வருகிற ஆதிதிராவிடர் மக்க ளுக்கு காமராஜர் ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட பட்டாவை உறுதி செய்து அரசாங்கம் பட்டா வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில்  இளையான்குடி வட்டாட்சி யர் அலுவலகத்தில் பெருந் திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.  இப் போராட்டத்திற்கு தாலுகா செயலாளர் ராஜு தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் பரிசுத்த மங்கள சாமி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் தண்டியப்பன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துராமலிங்க பூபதி, சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அழகர்சாமி,  ஜெயந்தி  ஆகியோர் பேசி னர். தாலுகாக் குழு உறுப்பி னர்கள் மலைராஜ்,சந்தியாகு,செந்தில்குமார், ராஜா, அமலி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் இளையான்குடி வட்டாட்சியருடன் பேச்சு வார்த்தை நடந்தது. பேச்சு வார்த்தையில் வட்டாட்சி யர் ஒருமாத காலத்தில் நட வடிக்கை எடுக்கிறேன் என போராட்ட தலைவர்களிடம் உறுதி கொடுத்தார்.