சிவகங்கை, ஏப்.8- சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மற்றும் காளை யார்கோவில் வட்டாரங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதி களில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல்துறை ஆகியவைகளின் திட்ட செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி ஏப்ரல் 8 சனிக்கிழ மையன்று நேரில் பார்வையிட்டு களஆய்வு மேற் கொண்டார். வேளாண்மை - உழவர்நலத்துறையின் சார்பில், கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2021-22 - சிவகங்கை மாவட்டத்தில் 43 தரிசு நிலத்தொகுப்புகளில் 330 எக்டேர் பரப்பில் முட்புதர்கள் நீக்கி போர்வெல் அமைத்து மின் இணைப்புடன் கூடிய மின்மோட்டார் அமைத்தல், நுண்ணீர் பாசனம், சொட்டு நீர்பாசனம் அமைத்தல், பழக்கன்றுகள் நடவு செய்தல் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரும் திட்டத்தில் அரசு மானியமாக இதுவரை ரூ.3.5 கோடி செலவிடப் பட்டுள்ளது. இதில் ரூ.81 லட்சம் செலவிடப்பட்ட இரு தரிசு நில தொகுப்புகள் மாங்குடி மற்றும் மேல மருங்கூர் கிராமங்களில் இன்று ஆய்வு மேற்கொள்ளப் பட்டு, திட்டப்பணிகளில் நிலுவை இனங்களை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் கொல்லங்குடி கிராமத்தில் ரூ.96 ஆயிரம் மானியத்தில் 2.5 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள டிராகன் ப்ரூட் பழங்களையும், சோமநாதபுரம் கிராமத்தில் ரூ.76 ஆயி ரம் மானியத்தில் 2 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப் பட்டிருந்த முந்திரி தோட்டம் மற்றும் சொட்டுநீர்ப்பாசன முறைகள் குறித்தும், பருத்திக்கண்மாய் கிராமத்தில் ரூ.16 ஆயிரம் மானியத்தில் கத்தரி வயலில் அமைக் கப்பட்டுருந்த பிளாஸ்டிக் மல்சிங் விரிப்பு தொடர்பாக வும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயி களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, இணை இயக்குநர் (வேளாண்மை) தனபாலன், வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் முரேஷ்குமார், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர்கள் வளர்மதி, செந்தில்நாதன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.