மதுரை, ஏப்.11- மதுரை மாவட்டத்தில் காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி யதன் மூலம் 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடு கையில் காசநோயின் பாதிப்பு தற்போது மதுரை மாவட்டத்தில் 40 சதவிகிதம் குறைக் கப்பட்டுள்ளது. அதை பாராட்டும் விதமாக ஒன்றிய அரசின் சார்பில் வெள்ளி பதக்கம் மதுரை மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள் ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி யில் பிரதமர் மோடி தலைமையில் காச நோய் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் பங்கேற்ற தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபா கர் சதிஸ் பிரதமரிடம் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை பெற்றார். தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் துணை இயக்கு நர்களின் சிறப்பான பணியை பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஏப்ரல் 11 அன்று மதுரை மாவட்டத்தின் காசநோய் துறையின் துணை இயக்குநர் மரு . சுபைர் ஹசன் முகம்மது கான் மாவட்ட ஆட்சித் தலை வர் மரு.அனிஷ் சேகரை நேரில் சந்தித்து மதுரை மாவட்டத்துக்கான வெள்ளி பதக் கம் மற்றும் பாராட்டு சான்றிதழையும் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் தனது மகிழ்ச்சி யை தெரிவித்ததோடு துணை இயக்குநர் தலைமையில் பணியாற்றும் மருத்து வர்கள் உள்ளிட்ட அனைத்து பணியா ளர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார். வரும் 2025 -ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத மதுரை மாவட்டமாக மாற்றுவதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.