திருப்புவனத்தில் மகளிர் பேரணி
சிவகங்கை, மார்ச் 21- சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் வேலை வாய்ப்பிலும் 33 சதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் செர்டு தொண்டு நிறுவன மகளிர் பேரணி ஆயிரம் பேர் பங்கேற்போடு நடைபெற்றது. இப்பேரணியை காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வா ளர் பாண்டியம்மாள் தொடங்கி வைத்தார். பேரணி முடி வில் நடைபெற்ற மகளிர் தின கருத்தரங்கில் செர்டு தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் போதும் பொண்ணு தலைமை வகித்தார். சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியம்மாள்,மருத்துவ ஆலோசகர் ஆனந்தி, செர்டு இயக்குனர் பாண்டி ஆகியோர் பேசினர். சுமதி நன்றி கூறி னார்.
சிலம்பம் போட்டி சாம்பவிகா பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்றனர்
சிவகங்கை, மார்ச் 21- சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி மாணவர் கள் சிலம்பம் போட்டியில் தங்கம் பதக்கம் வென்றுள்ள னர். மத்திய பிரதேசத்தில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இப் போட்டியில் சிவகங்கை சாம்பவிகா பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் ஆதித்யன், 8ஆம் வகுப்பு மாணவர் அருண்பிரகாஷ் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். தங்க பதக்கம் வென்ற மாணவர்களை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி செயலர் சேகர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
மேலூர் அரசு கல்லூரி மாணவர் கொலையில் 5 பேர் கைது
மதுரை, மார்ச் 21- மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோவில் திருவிழா வில் ஆடல்பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல் தொடர் பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் கம்பாளிப்பட்டி கிரா மத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் வாசுதேவன் (19) 4 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக தாக்கியும், பாட்டிலால் குத்திக் கொல்லப்பட்டார். மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத், மேலூர் அரசு மருத்துவமனைக்கு வந்து உறவினர் களிடம் சமாதானம் செய்தார். இந்நிலையில், காவல்துறை ஆலோசனையின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 21 அன்று கல்லூரி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு விடுமுறை விடப் படுவதாக முதல்வர் மணிமேகலா தேவி அறிவித்தார். மாணவர் வாசுதேவன் கொலை வழக்கில் மேலூரைச் சேர்ந்த பிரேம்குமார் (25), வீரா (19), சுதர்சன் (20), தனுஷ் (29),சரவண புகழ் (25) என உள்ளிட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
வேடசந்தூர் அருகே பாறைக்குழிநீரில் தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பலி
ஒட்டன்சத்திரம், மார்ச் 21- விழுப்புரம் மாவட்டம் குப்பத்தைச் சேர்ந்த வீடுகளுக்கு டைல்ஸ் ஒட்டும் கட்டிட தொழிலாளி அமீர்(வயது 27) இவ ரும் இவரது மனைவி மகாலட்சுமியும் திண்டுக்கல் மாவட் டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பாண்டியன் நக ரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருந்து தங்கியுள்ளர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அமீரும், அவரது மனைவி மகாலட்சுமி மற்றும் 2 குழந்தைகளுடன் தங்களின் துணிகளை துவைப்ப தற்காக பாண்டியன் நகர் அருகே உள்ள பாறைக்குழிக்கு நேற்று சென்றுள்ளனர். அங்கு மகாலட்சுமி தனது இரண்டு குழந்தைகளுடன் துணி துவைத்து கொண்டிருந்த பொழுது அமீருக்கும் மகா லட்சுமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது அமீர் நான் தண்ணீருக்குள் குதித்து விடவா என்று விளையாட்டு தனமாக மகாலட்சுமியிடம் கூறி யுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தடுக்கி அமீர் பாறைக்குழி தண்ணீருக்குள் விழுந்து பாசான் கொடிக்குள் சிக்கி உயிருக்கு போராடினார். அரை மணி நேரம் ஆகியும் அமீர் மேலே வரவில்லை என்று சந்தேகம் அடைந்த மகாலட்சுமி அலறி சத்தம் போட்டுள்ளார். மகாலட்சுமியின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து பாறைக்குழி தண்ணீருக் குள் இறங்கி நீண்டநேரம் தேடியும் அமீர் கிடைக்க வில்லை. இது குறித்து தகவல் கிடைத்தவுடன் வேடசந்தூர் தீய ணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ்அருள்பிரகாஷ் தலை மையிலா வீரர்கள் விரைந்து வந்து பாசன்கொடியில் சிக்கி இறந்து கிடந்த அமீரின் உடலை மீட்டனர். இது குறித்து எரியோடு காவல் சார்பு ஆய்வாளர் கலை யரசன் வழக்குப்பதிவு இறந்த அமீரின் உடலை மீட்டு வேட சந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
இராஜபாளையம் ரியல் எஸ்டேட் அதிபரிடம் கடன் வாங்கித் தருவதாக ரூ 20 லட்சம் மோசடி
தேனியில் 4 பேர் மீது வழக்குப் பதிவு
தேனி, மார்ச் 21- இராஜபாளையத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் கடன் வாங்கித் தருவதாக ரூ 20 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது தேனி குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் . இராஜபாளையம் சிங்காரக்கோட்டை தெருவைச் சேர்ந்தவர் குமாரசாமி மகன் விக்னேஷ் (23).இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் .கடந்த டிசம்பர் மாதம் ,பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் ரியல் எஸ்டேட் சம்பந்தமாக விளம்பரம் செய்துள்ளார். அதனைப் பார்த்த சென்னையை சேர்ந்த சத்தியசீலன் ,விக்னேஷை அணுகி ரூ. 2 கோடி கடன் வாங்கி தருவதாகவும், 2 சதவீத கமிஷனும் ,10 சதவீத ஆவண கட்டணம் செலுத்த வேண்டும் என சொல்லி யுள்ளார். அதனை நம்பிய விக்னேஷ், தனது வீட்டை அடமானம் வைத்து ரூ. 17 லட்சம், கையில் இருந்த ரூ .3 லட்சம் என ரூ.20 லட்சம் தயார் சத்தியசீலனுக்கு தக வல் தெரிவித்துள்ளார் .அப்போது அவர் 30.1.2023 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு பணத் துடன் வருமாறு தெரிவித்துள்ளார். அதனை நம்பிய விக்னேஷ் ,பணத்து டன் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் காத்தி ருந்தார் .அப்போது சத்தியசீலன் அனுப்பி யதாக கூறி திருப்பூரை சேர்ந்த இளங்கோ வன் என்பவர் அறிமுகமாகி பணத்தை தன்னிடம் கொடுக்கும் படி தெரிவித்துள் ளார். உடன் வந்த திருப்பூரை சேர்ந்த பார்த்திபன், சுந்தர் என்ற சுந்தரமூர்த்தி ஆகி யோர் நாங்களும் கடன் வாங்க வந்ததாக வும், பணத்தை கொடுத்து ஆவணத்தை வாங்க வந்ததாக சொல்லி விக்னேஷை நம்பிக்கையூட்டி உள்ளனர். பின்னர் மூவரும் பணத்தை பெற்றுக் கொண்டு தேனி ஆட்சியர் அலுவலகத்திற் குள் சென்று விட்டு ஆவணத்தை கொண்டு வருவதாக சென்றுள்ளனர். வெகு நேரம் ஆகியும் அவர்கள் திரும்பவில்லை. ஏமாறி யதை உணர்ந்த விக்னேஷ் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித் தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி, மார்ச் 21- பித்தளை பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க கோரி நெல்லை டவுண் வாகையடி முக்கில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சிஐடியு நெல்லை மாவட்ட ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனி யன பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலை வர் என். ராஜன் தலைமை தாங்கினார். பொது தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் எல்.சரவணபெருமாள் துவக்கி வைத்தார்.