சென்னை, ஜூன் 20- தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி மதிமுக சார்பில் அடுத்த மாதம் 20 ஆம் தேதி வரை பொது மக்களிடம் கையெ ழுத்து பெறும் நிகழ்ச்சி துவங்கியது. இதையொட்டி, சென்னை எழும்பூர் தலை மையகத்தில் பொதுச் செயலாளர் வைகோ கையெ ழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்நிக ழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக் கண்ணு முதல் கையெ ழுத்திட்டார். மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, வந்திய தேவன் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது:- தமிழ்நாட்டின் வர லாற்றில் சுதந்திர இந்தியா என்று நாடு விடுதலை பெற்ற பின் தமிழ்நாட்டு ஆளுநர்கள் யாரும் செய்யாத அட்டூ ழியம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்திய குடியரசு தலை வரை வலியுறுத்தி கையெ ழுத்து இயக்கம் நடத்து கிறோம்.
ஆளுநர் உரை என்பது ஆட்சியாளர்கள் தயாரிக் கும் உரை தான். குடியரசு தலைவர் உரை இந்திய அரசு தயாரிக்கும் உரை தான். ஆனால் பெரியார், அம்பேத்கர், அண்ணா பெயர்களை வாசிக்காமல் விட்டது மாபெரும் தவறு. அவர்கள் பெயர் உச்சரிக்க கூடாத பெயரா? மார்க்சியம் காலாவதியானது என்று சொன்னார். அது பற்றி இவருக்கு என்ன தெரியும். அம்பேத்கர் சொன்ன கருத்துக்கு மாறாக பேச ஆரம்பித்தார். முதலமைச்சர் வெளிநாட்டுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்த போது அவர் முயற்சியை முகத்தி ற்கு நேராக பேசுகிறார். முதலமைச்சர் செயலை விமர்சிப்பதற்கு இவர் எதிர்க்கட்சி தலைவரா? ஆளுநர் பதவியை விட்டு விட்டு என்ன வேண்டுமானா லும் பேசுங்கள். தமிழ்நாடு ஆளுநர் நீக்கப்பட்டால் தான் தமிழ்நாட்டில் ஜனநாயகம் ஜனநாயகமாக இருக்கும். தமிழ்நாட்டின் முதல் விரோதி, அரசியல் சட்டத் தின் விரோதி ஆர்.என்.ரவி. இவரை திரும்பப் பெற்று பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். திமுக தோழமை கட்சிகள் இதனை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.