districts

img

இலவச வீட்டு மனைப்பட்டா கோரி விருதுநகர் ஆட்சியரகம் முற்றுகை

விருதுநகர், பிப்.7- வத்திராயிருப்பில் உள்ள நொண்டியம்மன் கோவில் தெரு வைச் சேர்ந்த பொதுமக்கள் தங்க ளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கிடக் கோரி விருது நகர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட்டனர். விருதுநகர் மாவட்டம், வத்தி ராயிருப்பில் நொண்டியம்மன் கோவில் தெரு உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் சொந்த வீடு களின்றி வாடகை வீட்டில் குடி யிருந்து வருகின்றனர். எனவே, தங்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டுமென பலமுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லையென கூறப்படுகிறது. இதனால், ஆவேசமடைந்த பொதுமக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டனர். தக வலறிந்து விரைந்து வந்த  காவல்துறையினர், அவர்களி டம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு, மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் அனை வரும் தனித்தனியே மனு அளிக்க ஏற்பாடுகளை செய்தனர். இதை யடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.