தேனி ,டிச.16- தேனியில் பெட்ரோல் பங்க்கில் பணம் கேட்டு போ தையில் தகராறு செய்த சிவ சேனா கட்சியின் மாநிலச் செயலாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். தேனி பழனிச்செட்டிபட்டியை சேர்ந்தவர் ஐயப்பன், சிவசேனா கட்சியின் மாநில செயலாளராக உள்ளார். இவர் சிவசேனா கட்சி உறுப்பினர்களான ஸ்டாலின் பற்றும் நாட்ராயன் ஆகியோருடன் அதே பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பெட்ரோல் பங்க்கிற்கு மது போதையில் சென்று அன்னதானம் செய்வதாகக் கூறி கட்டாயம் பணம் தர வேண்டும் என்று கூறியுள்ளதாகவும், அதற்கு பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பணம் தர முடியாது என்று கூறியதை தொடர்ந்து செல்போனில் பெட்ரோல் பங்க் குறித்து அவதூறு வீடியோவை அங்கு பதிவு செய்துள்ள னர். இதனால் பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் சிவசேனா கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது. பின்னர் பெட்ரோல் பங்க் மேலாளர் ஹரிந்தன் அளித்த புகாரின் அடிப்படையில் சிவசேனா கட்சி மாநில செயலாளர் ஐயப்பன், அக்கட்சி உறுப்பினர் ஸ்டாலின் ஆகியோர் மீது பழனிச்செட்டிபட்டி காவல்துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதில் சிவசேனா கட்சி உறுப்பினர் நாட்ராயன் என்பவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதால் சிவசேனா கட்சி மாநில செயலாளர் ஐயப்பன் மற்றும் ஸ்டாலின் என இருவரை சிறையில் அடைந்துள்ளனர்.