districts

img

பள்ளிக் குழந்தைகளுக்காக சாஸ்தாவின் ஸ்பெஷல் அப்பளம்

மதுரை, அக்.23- மதுரை மாவட்டம் சிந்தா மணியில் சாஸ்தா அப்பள கம்பெனி நிறுவனர் மணிகண் டன் கூறியதாவது:-  மதுரை மாவட்டம் சிந்தா மணி, அனுப்பானடி குறுக்கு ரோடு பகுதியில் சாஸ்தா அப்ப ளம் கம்பெனி உள்ளது. இங்கு  பூண்டு, பெரண்டை, மிளகு அப்பளம், கல்யாண ஸ்பெஷல் அப்பளம், சீரக அப்பளம், பாய் அப்பளம்,பூ அப்பளம், மிளகு  அப்பளம், மோதிர அப்பளம்  என விதவித மான அப்ப ளங்கள் தயாரிக்கின்றனர்.  இலங்கை, சிங்கப்பூர் போன்ற  தமிழர்கள் வசிக்கும் அனைத்து நாடுகளுக்கும்  இந்தியா முழுவதும் . சிந்தா மணியில் உள்ள  சாஸ்தா  அப்பளம்தான் கொண்டுசெல் லப்படுகிறது. அனைவரும் சொல்லும் அளவிற்கு நல்ல தர மான முறையில் செய்து தரு கிறோம். எங்கள்  கம்பெனியில் தயார் செய்யும் அப்பளம் தவிர, சிந்தாமணியில் இருந்து அப்ப ளம் தயாரிக்க  தேவையான மூலப்பொருட்களை  காரி யாப்பட்டி, திருச்சுழி, விருது நகர், மதுரை வாடிப்பட்டி, தேனி, போடி என பல இடங்களில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழு வினருக்கு அனுப்பி வைத்து அந்த பகுதிகளில் இருந்தும் அப்பளங்களை தயார் செய் கின்றனர். குடும்பத் தொழிலாக இந்த  கம்பெனியை நடத்தி வரு கிறோம். வெளிநாட்டினரும்  இப்போது அப்பளம் வாங்கி  விரும்பி சாப்பிடுகின்றனர். மகளிர் சுய உதவிக்குழுவினர் புதிதாக தொழில்கள் துவங்க விரும்பினால், அவர்கள்  இந்த அப்பளம் தயாரித்தலை எங்கள் மூலம் துவங்கலாம். எப்போதும் விரும்பினால் வேலை வாய்ப்புகளும் 94437 60908ல் கிடைக்கும்.  பெண்களுக்கு மிகவும் ஏற்ற தொழிலாக உள்ளது.  மதுரையில் ஜெய்ஹிந்த் புரம், அனுப்பானடி, பனையூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கா னோர் இத்தொழில் ஈடு பட்டுள்ளனர். ஆனாலும் தேவைகள்  என்பது தொடர்ந்து அதிகரித்து  வருகிறது. எங்களது நிறுவனத்தில் 20 கிலோ அப்பளம் வாங்கி னால் ஊறுகாய் , ஆயில் இல வசமாக வழங்குகிறோம்.  புதிய வகை அப்பளம்  குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை குறிப்பாக மாணவ மாணவிகள் இன்றைய காலத்தில் உடம்புக்கு கேடு விளைவிக்கும் உணவு பொருட்  களை தொடர்ந்து வாங்கி  சாப்பிட்டுவிட்டு, சிறுவயதி லேயே உடம்பை கெடுத்துக் கொள்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் சாஸ்தா அப்பள கம்பெனியின் சார்பாக  மாணவ மாணவிகள் நலன் கருதி உடலுக்கு எதிர்ப்பு சக்தி யை கூட்டக்கூடிய ஞாபகத் திறன் அதிகரிக்க வல்லாரை, சீரகம், ஓமம். பெருங்காயம் ஆகிய உட்பட நவ மூலிகை களை கொண்டு மாணவர் ஸ்பெஷல் அப்பளம் (Students Special Appalam) தயாரித்து தற்போது விற்பனையை தொடங்கி உள்ளோம். மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அல்லது வீடுகளில் பெண்கள் சுய  தொழில் செய்ய விரும்பினால், அப்பளம் தயார் செய்வதற்  கான வாய்ப்பு அளிக்கப்படு கின்றது என்று எம்.மணிகண் டன் கூறினார்.