தேனி, மே 18- மல்யுத்த வீராங்கனை களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மல்யுத்த கூட்ட மைப்பு தலைவரும் ,பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக் கோரி மே 18 அன்று தேனியில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்திய மல்யுத்த கூட்ட மைப்பின் தலைவராக இருப் பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.க நாடாளு மன்ற உறுப்பினர் ஆவார். இவர் மல்யுத்த வீராங்கனை களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் 12 வீராங்க னைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்து பெண் மல் யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கிறார்கள். நீதிமன்ற உத்தரவு மூலம் வழக்கு பதிவு செய்யப் பட்டும் இது வரை பிரிஜ் பூஷன் சரண் சிங் கைது செய் யப்படவில்லை.
ஆர்ப்பாட்டம்
மல்யுத்த வீராங்கனை களின் போராட்டத்திற்கு ஆத ரவு தெரிவித்தும், பிரிஜ் பூஷன் சரண் சிங்கை உட னடியாக கைது செய்ய வலி யுறுத்தியும் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டச் செய லாளர் பி.சித்ரா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம். ராமச்சந்தி ரன் , விவசாயத்தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எல்.ஆர் . சங்கரசுப்பு, வாலி பர் சங்க மாவட்டச் செயலா ளர் சி .முனீஸ்வரன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.வேல் பிரகாஷ், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி. அண்ணாமலை ஆகி யோர் பேசினர். கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் சி.முரு கன், டி.வெங்கடேசன், தேனி தாலுகா செயலாளர் இ.தர்மர் ,மாதர் சங்க நிர்வா கிகள் எஸ். மீனா, எஸ். வெண்மணி, சிஐடியு மாவட்ட தலைவர் டி . ஜெய பாண்டி,மாவட்ட பொரு ளாளர் ஜி . சண்முகம் வாலி பர் சங்க நிர்வாகிகள் டி. ராஜா, நாகராஜ், விவசா யத்தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தயாளன் , மாண வர் சங்க நிர்வாகி சேகுவேரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.