இராமநாதபுரம்,ஜன.21- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்திற்குள் ஜனவரி 20 அன்று மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு கடல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கருணா மூர்த்தி தலைமையில் இராமேஸ்வ ரம் நகராட்சி இராமகிருஷ்ணாபுரம், நடராஜபுரம் மற்றும் மண்டபம் தோப்புக்காடு பகுதி சார்ந்த கரை வலை தோணி மற்றும் நண்டு வலை மீன்பிடிப்பு செய்யும் நாட்டுப்படகு மீனவர்கள் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி னர். இந்நிகழ்வில் கரைவலை தோணி நாட்டுப்படகு மீனவர் சங் கம் (சிஐடியு) தலைவர் எம்.உமை யவேல், ஏ.தங்கவேல்,டி.சுப்பிர மணி மற்றும் நண்டு வலை சிறு தொழில் நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர்கள் குருசாமி, நம்பு, மண்டபம் தோப்புக்காடு கிராம தலைவர் எம்.பால்ச்சாமி,எம்.செல்வராஜ், கார்த்திக் கே.பஞ்சு, பேரூராட்சி கவுன்சிலர் சத்யா, யு. மனோகரி உள்ளிட்ட 100 க்கும் அதிக மானோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் 1983 தமிழ் நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் மூலம் விசைப்படகுகள் இரட்டைமடி வலைகளை பயன் படுத்தி மீன்பிடிப்பதும் அதே போல் கரையில் இருந்து 5 கடல் மைல் (9.25 கிலோ மீட்டர்) தொலைவு பகுதிக்குள் மீன்பிடிப்பதும் மேலும் நாட்டுப்படகுகளில் வசதி படைத்த ஒரு சிறு பிரிவினர் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப் பதும் முற்றாக தடை செய்யப் பட்டுள்ள சூழலில் இம்மீன்பிடிப்பு கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் மிகப்பெரும் அளவில் நடைபெறு வதை தடுத்திட மீன்வளத்துறை, கடற்படை, கடலோர காவல்படை, கடலோர காவல் குழுமம், கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு, வனத்துறை, காவல்துறை, வரு வாய்த்துறை உள்ளிட்ட துறை களை ஒருங்கிணைத்து சிறப்பு படை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீன்வளத்துறை துணை இயக்குநரை விசாரித்திடுக!
மேற்படி சட்ட விரோத மீன் பிடிப்புகள் தொடர்வதற்காகவே ஏற்கனவே கடந்த ஆட்சியில் இதே மீன்பிடிப்புகளை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டு பல் வேறு புகார்களின் அடிப்படையில் கடலூருக்கு பணி மாறுதல் செய் யப்பட்ட மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயனை திரும்பவும் இதே பகுதிக்கு பணி மாறுதலில் கொண்டு வந்த பிறகே மீண்டும் இந்த சட்ட விரோத மீன் பிடிப்புகள் தொடர்கின்றன. எனவே மேற்படி நபரை உடனடியாக கடல் மீன்பிடிப்பு அல்லாத வேறு பகு திக்கு பணி மாறுதல் செய்வது டன் மேற்படி நபர் மீது பொது விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும். இராமேஸ்வரம் பகுதியில் சட்ட விரோத இரட்டைமடி சுருக்குமடி மீன்பிடிப்புகள் மீது கடுமையான நட வடிக்கைகள் மேற்கொண்டதை யொட்டி கடந்த ஆட்சியில் ஆளுங் கட்சியின் அரசியல் தலையீட்டால் பணி மாறுதல் செய்யப்பட்ட மீன் வளத்துறை உதவி இயக்குநர் மணிகண்டனை மீண்டும் இதே பகு திக்கு திரும்ப கொண்டு வர வேண்டும் என்று நாட்டுப்படகு மீன வர் சங்கம் விடுத்த கோரிக்கை யின் அடிப்படையில் இராமேஸ்வ ரம் பணிமாறுதலாகி வந்து மீன வர்கள் எதிர்பார்த்தது போலவே இரட்டைமடி, சுருக்குமடி மீன் பிடிப்புகள் மீது கடுமையான நட வடிக்கை மேற்கொள்ள முயன்ற ஒரே காரணத்திற்காக பணிக்கு வந்த நான்கு மாதங்களிலேயே மேற்படி நபரை மீண்டும் பணி மாறுதல் செய்ததுடன் நில்லாது அவரை காத்திருப்போர் பட்டிய லுக்கு கொண்டு சென்றிருப்பதை கண்டித்தும் மேற்படி நபரை திரும்ப வும் இதே பகுதிக்கு பணியமர்த்திட வேண்டும். தற்போது மாவட்டத் தில் காலியாக உள்ள இரண்டு மீன்வளத்துறை உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு பொருத்த மான நபர்களை நியமிப்பதுடன் தற்போது பொறுப்பில் இருக்கும் மீன்துறை உதவி இயகுநர்களை யும் பணி மாறுதல் செய்து வேறு இரு பொருத்தமான நபர்களை பணி நியமனம் செய்திட வேண்டும். அடுத்து மண்டபம் பேரூராட்சி யில் தோப்புக்காடு மீனவ கிரா மத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தொடர் பாதிப்பை ஏற்படுத்தி வந்த கபானா கோரல் ரீப் என்ற தனியார்
உல்லாச கேளிக்கை விடுதி கடல் தொழிலா ளர் சங்கம் (சிஐடியு) தலைமையி லான கிராம மக்களின் தொடர் போராட்ட நடவடிக்கைகளை யொட்டி 2020 ஆம் ஆண்டு மூடி சீல் வைக்கப்பட்ட சூழலில் மேற் படி ரிசார்ட்டை மீண்டும் திறப்ப தற்காக மேற்படி விடுதி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் இருமுறை தள்ளுபடி செய்யப் பட்டன. தற்போது மூன்றாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட 222/2022 என்ற மனு மீதான வழக்கு நிலுவையில் இருந்து வரும் சூழலில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட நிர்வாக நடுவர் நீதிமன்றத்தில் மேற்படி விடுதி உரிமையாளர் தாக்கல் செய்துள்ள வழக்கில் மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் சம்மந்தப்பட்ட பகுதி மக்களின் கருத்தை அறியா மல் மதுரை உயர்நீதிமன்றம் ஆட் சேபணைதாரர்கள் இருப்பின் அவர்கள் கருத்தை அறியாமல் எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளக்கூடாது என்று உத்தர விட்டது. இந்த உத்தரவை கவ னத்தில் எடுத்து கொள்ளாமல் நிர் வாகத்திற்கு சாதகமாக அனுமதி வழங்க முயற்சிப்பதை உடன் கை விட கோரியும் இது விசயத்தில் உண்மைக்கு மாறான விபரங்களை மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்திற்கு அறிக்கையாக தாக்கல் செய்துள்ள இராமநாதபுரம் வட்டாட்சியர் நிர்வாகம் மீது பொது விசாரணை நடத்த வேண்டும் என்று போராட் டக்காரர்கள் வலியுறுத்தினர்.