சாத்தூர், நவ.4- தமிழக அரசு, விவசாயத் தொழிலாளர்க ளை பாதுகாத்திட, அவர்களுக்கான தனித் துறையை உருவாக்கிட வேண்டும். 100 நாள் வேலையை பாகுபாடின்றி முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்க வேண்டும். கங்கரகோட்டை ஊராட்சியில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும் என்று அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் சாத்தூர் தாலுகா மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தூங்காரெட்டியபட்டியில் நடைபெற்ற ஒன்றிய மாநாட்டிற்கு கிரேனாப் தலைமை வகித்தார். சங்க கொடியை மாவட்ட பொரு ளாளர் சி.ஜோதிலட்சுமி ஏற்றி வைத்தார். துவக்கி வைத்து விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.சுப்பாராஜ் பேசினார். வேலை அறிக்கையை வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி சமர்ப்பித் தார். மாநாட்டை வாழ்த்தி விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் மனோஜ் குமார் பேசினார். மாவட்டச் செயலாளர் எம்.சுந்தரபாணடியன் சிறப்புரையாற்றி னார். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தாலுகா தலைவராக பாண்டியம்மாள், செயலாளராக கிருஷ்ண மூர்த்தி, பொருளாளராக தங்கமுனி யம்மாள், துணைத் தலைவர்களாக காளியப்பன், பரமேஸ்வரி, துணைச் செயலாளர்களாக தாமரைக்கனி, சாரதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.