தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 40 ஆம் ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு மதுரையில் ஞாயிறன்று கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜெ. மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் க.நீதிராஜா வரவேற்றார். மாநிலத் தலைவர் மு.அன்பரசு கருத்துரையாற்றினார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் எம். பி. முருகையன், சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.லெனின், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச்செயலாளர் அ.பால்முருகன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் பெ.சீனிவாசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டப்பொருளாளர் க.சந்திரபோஸ் நன்றி கூறினார்.