கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் செவ்வாயன்று (நவ.22) தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான பா.ஜோதி நிர்மலாசாமி அனைத்துதுறை வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகள், பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் கவுசிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.