districts

மதுரை முக்கிய செய்திகள்

குஜராத்தில் நாளை  இரண்டாம் கட்ட தேர்தல்

அகமதாபாத், டிச.3-  குஜராத்தில் நாளை  இரண்டாம் கட்ட தேர்தலில் 93  தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற் கான பிரச்சாரம் டிசம்பர் 3 மாலையுடன் ஓய்ந்தது.  குஜராத் சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 182 இடங்க ளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி 19 மாவட்டங்களுக்கு உட்பட 89 தொகுதி களுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 1 ஆம்  தேதி நடைபெற்றது. 66.75 சதவீத வாக்குகள் பதிவாகி யிருந்தன. கிட்டத்தட்ட 3.61 சதவீத வாக்குகள் குறைந்துள்ளன. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர்  5 அன்று  93 தொகுதிகளில் நடைபெறுகிறது. மேற்கண்ட தொகுதி களில் 69 பெண்கள் உட்பட 833 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ஆம் நடை பெறுகிறது. 

இடைநிலை ஆசிரியர் சங்க மதுரை  கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு 

மதுரை, டிச.3-  தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மதுரை மாவட்ட  கிளை தேர்தல் சனிக்கிழமையன்று மூட்டா அலுவல கத்தில் நடைபெற்றது  இதில் மாவட்டத் தலைவராக சி. நாகராஜன், துணைத்  தலைவர்களாக ராமன், ரஞ்சனி தங்கச் செல்வி, மாவட்டச்  செயலாளராக எம். ராஜரத்தினம், இணைச் செயலா ளர்களாக என். ரவிச்சந்திரன், அகிலா, பொருளாளர் லிங்க  காமாட்சி நாதன், அமைப்புச் செயலாளராக இசக்கி பாண்டி, தலைமையிடச் செயலாளராக விஜயா, மாவட்ட  மகளிர் அணி செயலாளராக சுகந்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மதுரை மாவட்டத்தில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளி களில் பணியாற்றுகின்ற இடைநிலை  ஆசிரியர்களை பணி  நிரவலுக்கு உட்படுத்தக் கூடாது. உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றுகின்ற இடைநிலை ஆசிரியர் களுக்கு மாற்றுப் பணி வழங்கக் கூடாது. உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்று கின்ற இடைநிலை ஆசிரியருக்கு விரைந்து தமிழக  பள்ளி கல்வித்துறை பதவி உயர்வுக்கான கலந்தாய்வை  நடத்திட வேண்டும். 19 ஆண்டுகளாக தமிழ்நாடு இடை நிலை ஆசிரியர் சங்கத்தால் வலியுறுத்தி கேட்கப்பட்டு கொண்டுள்ள உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பணியாற்று கின்ற அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்ட தாரி ஆசிரியராக உட்படுத்திட வேண்டும் என்பன உள்  ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

போடி அருகே மூதாட்டியை தாக்கி  கொலை மிரட்டல்: 7 பேர் மீது வழக்கு

தேனி, டிச.3-      போடி அருகே துரைராஜபுரம் காலனியை சேர்ந்தவர்  மனோகரன் மகன் விஜயராஜன் (42). இவருக்கு சொந்த மான தோட்டம் போடி குரங்கணிக்கு அருகே மேல்முட்டம் கிராமத்தில் உள்ளது. இதே பகுதியில் தேனி பொம்மைய கவுண்டன்பட்டியை சேர்ந்த நடராஜ் மகன் செல்வராஜ் என்பவருக்கும் தோட்டம் உள்ளது. இருவரும் சேர்ந்து மேல்முட்டம் மலைப்பகுதியில் வீடு விலைக்கு வாங்கி அங்கு தங்கி விவசாயம் செய்து வந்தனர். இருவரும் மாறி மாறி தங்கி வந்ததில் செல்வராஜ் தோட்ட வேலைக்காக வேறு சில நபர்களையும் வீட்டில் தங்குவதற்கு அழைத்து வந்ததால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதில் தகராறு ஏற்பட்டு செல்வ ராஜ், சாந்தி, குமார், செல்வராஜின் சித்தப்பா உள்ளிட்ட 7 பேர் விஜயராமனை சாதி பெயரைச் சொல்லி திட்டியும், தாக்கியும், தடுக்க வந்த விஜயராமனின் தாயார் மாரி யம்மாள் (65) என்பவரை தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து விஜயராமன் கொடுத்த புகாரின் பேரில் குரங்கணி காவல்துறையினர் செல்வ ராஜ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர். போடி டி.எஸ்.பி. சுரேஷ் தனி விசா ரணை நடத்தி வருகிறார்.

கொடைக்கானல் கொலை வழக்கில் 5 பேர் கைது

திண்டுக்கல், டிச.3- கொடைக்கானலில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு  தென்காசியை சேர்ந்த சூர்யா (30) என்பவர் இசைய மைப்பாளராக இருந்தார். இவர் பூம்பாறை மலை கிரா மத்தில் தனியார் தங்கும் விடுதி ஒன்றை ஒப்பந்தத்திற்கு எடுத்து நடத்தி வந்துள்ளார்.  சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த ஸ்வேதா (25) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இதற்கி டையே ஸ்வேதா, சூர்யாவை விட்டு பிரிந்து சென்று விட்டார். இந்நிலையல் சூர்யா கொடைக்கானல் கல்லுக்  குழியில் ஒரு வீட்டில் மாத வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். இந்நிலையல் பிரிந்து சென்ற ஸ்வேதாவும் கொடைக்கானலுக்கு வந்து பாம்பார்புரத்தில் வாட கைக்கு வீடு எடுத்து தங்கி தனியார் பள்ளியில் யோகா ஆசிரியர் வேலைக்காக முயற்சித்து வந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பு ஸ்வேதா, சூர்யாவை போனில்  தொடர்பு கொண்டு நேரில் சந்தித்து பேசியுள்ளனர். ஸ்வே தாவை சூர்யா தான் தங்கியுள்ள வீட்டுக்கு சில தினங்க ளுக்கு முன்பு அழைத்துச்சென்றுள்ளார். இதனையடுத்து ஸ்வேதா தனது ஆண் நண்பர்கள் கௌதம், அகிழ், பராந்தக சோழன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய 4 பேரை வைத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.  இது தொடர்பாக ஸ்வேதா மற்றும் அவரது ஆண்  நண்பர்களை கொடைக்கானல் போலீசார் கைது செய்த னர். மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் பாஸ்க ரன் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கண்ட 5 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சூர்யாவின் உடல் உடற்கூராய்வுக்காக திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. பிரே தப்பரிசோதனையில் சூர்யா கொலை செய்யப்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்ததையடுத்து 5 பேர் மீதும் கொலை வழக்குப் பதியப்பட்டு விசாரிக்கப்பட்டு வரு கிறது. (நநி)

சிறுமிக்கு கொலை மிரட்டல்: விடுத்த வாலிபர் கைது

தேனி, டிச.3- காதலிக்க மறுத்த சிறுமிக்கு கொலை மிரட்டல்  விடுத்த வாலிபரை கம்பம் வடக்கு காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் . கம்பம் தங்கவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி மகன் சிபி (20). இவர் கம்பத்  தில் 9 ஆவது படிக்கும் மாணவியை காதலிக்கச் சொல்லி வற்புறுத்தி வந்துள்ளார் .அந்த மாணவி மறுத்து பெற்றோரிடம் சொல்லப் போவதாக கூறி யுள்ளார் .சொன்னால்  ஆசிட் ஊற்றி கொலை செய்து  விடுவதாக சிபி மிரட்டியுள்ளார். இதுகுறித்து அந்த மாணவி கம்பம் தெற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தேனி, டிச.3- நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை கார ணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்  வரத்து 2001 கன அடியாக அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி,அரசரடி, வெள்ளியணை, இந்திராநகர் ஆகிய பகுதி களில் வெள்ளிக்கிழமை  இரவு முதல் சனிக்  கிழமை  காலை வரை விட்டுவிட்டு மழை  பெய்தது. இதனால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் மேக மலை, சின்ன சுருளி அருவிகளில் வெள்ளப்  பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் சுருளி அருவி, கும்பக்கரை அருவியிலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணி கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து ஆனந்தமாக குளித்துச் செல் கின்றனர்.  முல்லை பெரியாறு அணையின் நீர்மட் டம்  139.55 அடியாக உயர்ந்துள்ளது. வெள்  ளிக்கிழமை  689 கன அடியாக இருந்த நீர்  வரத்து சனிக்கிழமை  காலை 2001 கன  அடியாக அதிகரித்துள்ளது. அணையிலி ருந்து 511 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்  படுகிறது. நீர் இருப்பு 7013 மி.கனஅடி. வைகை அணையின் நீர்மட்டம் 65.62 அடி,  நீர் வரத்து 914 கனஅடி, திறப்பு 1719 கன அடி, இருப்பு 4767 மி.கனஅடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடி, வரத்து 100 கனஅடி, சோத்துப்பாறை நீர்மட்டம் 126.57 அடி, வரத்து 142 கனஅடி,  மழையளவு  பெரியாறு 2.4, தேக்கடி 3.8, கூடலூர் 1, மஞ்சளாறு 4, பெரியகுளம் 2.4, சண்முகா நதி 1.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்  ளது.

விருதுநகரில் கடன் பெற முன் பணம்  கொடுத்து ஏமாந்த தம்பதியர் தற்கொலை

விருதுநகர், டிச.3- விருதுநகரில் ரூ.5 லட்சம் கடன் பெற  முன் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்த  தம்பதியர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். விருதுநகர் எஸ்.பி. நந்தவனம் தெரு வைச் சேர்ந்தவர் கார்த்திகேயராஜன் (41).    விருதுநகரில் பெயின்ட் கடை வைத்து வியா பாரம் செய்து வந்தார். இவரது மனைவி அரு ணமகாஸ்ரீ(37). இவர்களுக்கு இரு குழந்தை கள் உள்ளனர். இந்தநிலையில், கார்த்தி கேயராஜன் தொழில் செய்திட பணம் தேவைப் பட்டுள்ளது. எனவே, கடன் பெறலாம் என  நினைத்துள்ளார். அப்போது, தேனி மாவட்  டம், சின்னமனூரைச் சேர்ந்த முத்துமகா ராஜா என்பவர் அருணமகாஸ்ரீயை நாடி யுள்ளார். தான் ரூ.5 லட்சம் வரை கடன் பெற்றுத் தருவதாகவும், அதற்கு முன் பணம் வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதை நம்பிய தம்பதியர் இருவரும் முத்து மகாராஜாவிடம் கணிசமான தொகையை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சொன்னபடி முத்துமகாராஜா கடன் பெற்றுத் தரவில்லை. இதனால் தம்  பதியர் இடையே தொடர்ந்து பிரச்சனை  ஏற்பட்டது. பின்பு, இருவரும் சேர்ந்து முத்து மகாராஜாவிடம் பணத்தை திரும்பக் கேட்  டுள்ளனர். ஆனால், அவர் வாங்கிய பணத்தை   தராமல் இழுத்தடித்துள்ளார். பின்பு, இவர்  களிடம் செல்போனியில் பேசுவதையும் தவிர்த்துள்ளார். இதனால், மனமுடைந்த கார்த்திகேய ராஜன் மற்றும் அருணமகாஸ்ரீ ஆகியோர் வெள்ளியன்று இரவு தங்களது குழந்தை யை அருகில் இருந்த பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்பு,  இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்  டனர். சனிக்கிழமையன்று காலை, குழந்தை வீட்டிற்கு வந்து, கதவை தட்டியபோது,  நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லை. தகவலறிந்து வந்த மேற்கு காவல்துறை யினர் கதவை உடைத்து உள்ளே சென்ற னர். அப்போது,  அங்கு அருணமகாஸ்ரீ எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். மேலும், இறந்த நிலையில் கிடந்த தம்பதி யரின் உடல்களை கைப்பற்றி  உடல்கூராய்  வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்  லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். இச்சம்பவம் குறித்து விருதுநகர் மேற்கு  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து  பணத்தை வாங்கி ஏமாற்றிய நபரைத் தேடி  வருகின்றனர்.

தேனி அருகே தற்காலிகமாக திறக்கப்பட்ட நான்கு வழிச்சாலையில் விரிசல்

அச்சத்தில் மக்கள்

தேனி, டிச.3- கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தற்காலிகமாக போக்கு வரத்து பயன்பாட்டிற்குத் திறக்கப் பட்ட புதிய நான்கு வழிச் சாலையில் தேனி அன்னஞ்சி அருகே   விரிசல்  ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந் துள்ளனர். திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில், வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம்- அனுமந்தன்பட்டி, கம்பம்-கூடலூர் பகுதிகளில் நான்கு வழிச் சாலை  பணிகள் நிறைவடைந்து போக்கு வரத்து பயன்பாட்டிற்கு திறக்கப்பட் டுள்ளது. இந்த சாலையை பயன்  படுத்திச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க உப்புக் கோட்டை விலக்கு அருகே நெடுஞ்சா லைத் துறை சார்பில் சுங்கச் சாவடி  அமைத்து செயல்பட்டு வருகிறது.  இந்த நிலையில், தேனி அன் னஞ்சி விலக்கு பகுதியிலிருந்து தேனி-போடி சாலை சந்திப்பு வரை யிலான புதிய நான்கு வழிச் சாலை  பணிகள் நிறைவடைந்து, கடந்த  நவம்பர் 30 ஆம் தேதி போக்குவரத்து பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது. இதையடுத்து கன ரக வாகனங்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் இந்தச்  சாலையை பயன்படுத்தி அன்ன னஞ்சி விலக்கு பகுதியிலிருந்து தேனி, பழனிசெட்டிபட்டி, முத்துத் தேவன்பட்டி ஆகிய ஊர்களுக்குள் செல்லாமல் வீரபாண்டி வரை சென்று வருகிறது. இந்த நிலையில், அன்னஞ்சி விலக்கு அருகே தனியார் ஆலை எதிர்புறம் உள்ள பாலம் பகுதியில் நான்கு வழிச் சாலையில் திடீர் விரி சல் ஏற்பட்டது. இது குறித்து நெடுஞ்  சாலை துறையினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டு, சாலையை சீரமைக் கும் பணி நடைபெற்று வருகிறது.

விவசாயத் தொழிலாளர் சங்க இராஜபாளையம் மேற்கு ஒன்றிய மாநாடு

இராஜபாளையம், டிச.3- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் இராஜபாளையம் மேற்கு ஒன்றிய  மாநாடு கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. துவக்கி வைத்து மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி பேசினார் . சிஐடியு தலைவர்  சந்தனகுமார் ,கைத்தறி மாவட்ட செயலாளர்  ராமர், மாதர் சங்க செயலாளர் பொன்னுத்தாய், வாலிபர் சங்கர் செயலாளர் பரமேஸ்வரன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர்.  மாவட்டச் செயலாளர் சுந்தரபாண்டியன் நிறைவுரையாற்றினார். ஒன்றியத் தலைவராக பவுல், செயலாளராக கனகராஜ் ,பொருளாளராக கலைச்செல்வி  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

சிமெண்ட்  டீலர் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி  திருச்சியை சேர்ந்த இருவர் மீது வழக்குப்பதிவு

தேனி, டிச.3- சிமெண்ட்  டீலர்ஷிப் தருவாகக் கூறி ரூ.  10 லட்சம் மோசடி செய்ததாக இருவர் மீது தேனி குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் . தேவாரம் அருகே வெப்பக்கோட்டை யைச் சேர்ந்தவர் அய்யப்பன் .இவர் போடி யில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் திருச்சி சத்திரம் பேருந்து நிலை யம் அருகே உள்ள ராயல் சிட்டி அபார்ட் மெண்டில் குடியிருக்கும் வேல்மணி, அசோக்  சரவணன் ஆகியோர் சந்தித்து குஜராத் மாநி லம், சூரத் நகரில் சிமெண்ட் உற்பத்தி செய்து  வருவதாகவும், மதுரை பகுதியில் மொத்த  விற்பனை செய்ய டீலர் தருவதாகவும் தெரி வித்துள்ளனர். அதற்கு முன் தொகையாக ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும் என கூறி யுள்ளனர். அதனைத் தொடர்ந்து அய்யப் பன்  3 தவணைகளில் வங்கிக் கணக்கில் ரூ. 10 லட்சம் செலுத்தியுள்ளார். அவர்கள் சொன்னபடி டீலர்ஷிப் தர வில்லை. பணத்தை திருப்பிக்கேட்ட போது  குஜராத் மாநிலம் ,அகமதாபாத் நகரில் உள்ள தனியார் வங்கி கணக்கில் வேல்மணி தலா ரூ 5லட்சம் வீதம் இரண்டு காசோலை கொடுத்துள்ளார் .அந்த காசோலை வங்கி யில் பணமில்லாமல் திரும்பி வந்து விட்டது.  இது குறித்து அய்யப்பன் நீதித்துறை நடு வர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார் .நீதி மன்றத்தின் உத்தரவுப்படி இருவர் மீது வழக்கு பதிவு செய்து தேனி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சீமைராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.