மதுரை, டிச.27- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அ.கோவில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அ. மீனாட்சிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வரு கிறது. இப்பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகள் தங்களுடைய பெற்றோர் களுடன் திங்களன்று மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, பள்ளியில் செயல் பட்டுவந்த கழிப்பறை மற் றும் சில கட்டிடங்கள் பழ மையானது எனக் கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. தற்போது வரை கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மாணவ-மாணவிகள் தவித்து வருகின்றனர். கழிப்பறை இல்லாத நிலையில் திறந்தவெளியி லும், வீடுகளுக்கும் மாணவ மாணவிகள் சென்று வரு கின்றனர். சாலையோரமாக பள்ளி செயல்படுவதால் சாலைகளை கடந்துசெல்ல வேண்டிய நிலையும் உள்ள தால் மாணவ மாணவியர்கள் அச்சத்துடன் கடந்துசெல் கின்றனர். 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியில் பராமரிப்பின்றி உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி யாக உள்ளது. இது குறித்து பலமுறை உரிய துறைகளில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையென்றனர் மாண வர்களின் பெற்றோர். இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு கழி வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலி யுறுத்தி திங்களன்று ஆட்சி யரிடம் மனு அளித்தனர்.