சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஒருங்கிணைப்பாளர்கள் பெ.சேகர் முருகேசன், பாண்டியன், அருள்செழியன், சிவபாலன், விஜய ராமலிங்கம், எம்.முருகேஸ்வரி, ராஜேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.