districts

img

பழங்காநத்தம் பகுதியில் பாதாள சாக்கடை உடைப்பு.

மதுரை, அக்.26-  மதுரை மாநகராட்சி  பழங்காநத்தம் 71-ஆவது  வார்டு பொட்டு ஊரணி தெரு,  தன்டால்காரன்பட்டி பகுதி யில் கடந்த இரண்டு மாதங்க ளாக பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர்  அதிக அளவில் வெளியேறி தெருக்களில் தேங்கி நிற்கி றது. 

இதனால், அப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற் பட்ட மக்கள் தினசரி கழிவு நீரில் நடந்து செல்லும் சூழ்  நிலை ஏற்பட்டுள்ளது. மேலும்  கழிவு நீரினால் உற்பத்தியா கும் கொசுக்களால் பலருக்கு காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீரில் சாக்கடை கலந்து வருகின்றது.  ஏற்கெனவே மதுரை மாநகர் பகுதிகளில் கொசுக்  களால் டெங்கு காய்ச்சல் பர வும் அபாயம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், மாநகராட்சி நிர்வாகம்  உடனடியாக பாதாள  சாக்கடை உடைப்பை சரி  செய்து கழிவு நீர் வெளியேறு வதை தடுத்து பொதுமக் களை பாதுகாத்திட வேண் டும் என்று அப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.