சிவகங்கை, ஏப்.23- சிவகங்கை மாவட்டத்தின் தலைநக ரான சிவகங்கை நகரில் வீதிகள் தோறும் குவிந்துகிடக்கும் குப்பைகளால் சுகாதா ரச்சீர்கேடு நிலவுகிறது. இதனை உடனடியாக அகற்றி தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை சிவகங்கை நகராட்சி நிர்வாகமும் ,மாவட்ட நிர்வாமும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக மாவட்டச் செயலாளர் தண்டி யப்பன் அறிவித்துள்ளார். கட்சியின் மாவட்டச் செயலாளர் தண்டி யப்பன், ஒன்றியச் செயலாளர் உலகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் விசுவநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர் வேங்கையா ஆகியோர் சிவகங்கை நகரில் வீதிகள் தோறும் குவிந்து கிடக்கின்ற குப்பைகளை நேரில் பார்வையிட்டனர் . மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மயானத்தில் கொட்டப்படுகிற கழிவு கள் இந்த பகுதி முழுவதும் பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. அரசு குடி யிருப்பு அருகே மருதுபாண்டியர் நகரில் குப்பைகளை சுத்தம் செய்து நுண்ணுரம் தயாரிக்கப்படுகிறது.
இதிலிருந்து வெளி யேறுகிற கழிவுகளை அகற்றாமல் இப்பகுதி முழுவதும் தேங்கிக்கிடக்கிறது. சிவகங்கை அரசு குடியிருப்பு அருகே கொட்டப்படுகிற கழிவுகள் மருத்துவக் கழிவுகளாக உள்ளன. அந்த கழிவுகளும் தேங்கி பெரும் விளைவு களை ஏற்படுத்தும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள் . குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி களின் பெண்கள் உட்பட பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் கேட்டுக்கொண்டார். அரசு மருத்துவமனையில் இணை இயக்குனருக்கு கட்டப்பட்ட குடியிருப்பு பாழ டைந்துபோய்விட்டது. அந்த குடியிருப்பு அருகே குப்பைகள் தேங்கியுள்ளன. சிவ கங்கை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் எரிக்கப் பட்டு, அதிலிருந்து வெளியேறும் புகையால் சுற்றுப்புறச்சூழ்நிலை பாதிக்கப்படுகிறது. இந்த குப்பைகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விபரங்களுடன் தொகுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் தண்டியப்பன், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு அனுப்பியுள் ளார்.
நகருக்கு வெளியே 6 ஏக்கர் இடம் ஒதுக்க கோரிக்கை
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்தி டம் கட்சியினர் வலியுறுத்தினர். அப்போது நகராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், சிவ கங்கை நகரத்தில் 27 வார்டுகள், 357 தெருக் கள் உள்ளன. இங்கு தினந்தோறும் 18 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது . மருது பாண்டியர் நகரில் குப்பைகளை சுத்தப் படுத்தி நுண் உரமாக தயாரிக்கப்படுகிறது. காளவாசல் பகுதியிலும் அம்பேத்கர் சிலை அருகே உள்ள பகுதியிலும் குப்பைகளில் இருந்து நுண் உரம் தயாரிக்கப்படுகிறது. இதிலிருந்து வரும் குப்பை கழிவுகளை நக ருக்கு வெளியே கொண்டு போய் சேகரித்து வைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் உள்ளது .சிவகங்கை நகரத்துக்கு வெளியே ஆறு ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஒதுக்கித்தர வேண் டும் என்று சிவகங்கை நகராட்சியின் சார் பாக நகர்மன்ற தலைவர், நகர்மன்ற துணைத் தலைவர், நகராட்சி நகர்மன்ற உறுப்பி னர்கள், நகராட்சி ஆணையர் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனு மீது இது வரைக்கும் நடவடிக்கை மேற்கொள்ள வில்லை .நகருக்கு வெளியே ஆறு ஏக்கர் இடம் ஒதுக்கிக்கொடுத்தால்தான் இதனை ஒழுங்குபடுத்த முடியும் என்று சிவகங்கை நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவிக்கிறார்கள். சிவகங்கை நகரத்தை சுகாதாரமான நகராக மாற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று மாவட்டச் செயலாளர் தண்டியப்பன் தெரி வித்துள்ளார்.