மதுரை, மே 21- மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 5 லட்சத்தில் 59 ஆவது வார்டு மக பூப்பாளையம் அம்பேத்கர் நகரில் உள்ள சமுதாய கூடம் மேற்கூரை அமைக்கும் பணி துவக்க நிகழ்ச்சி சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜா. நரசிம்மன், பகுதிக்குழு செயலா ளர் வை. ஸ்டாலின், வார்டு மாமன்ற உறுப்பினர் மகாலட்சுமி, 56 ஆவது மாமன்ற உறுப்பினர் வை.ஜென்னியம் மாள், திமுக வட்ட செயலாளர் அழகு சுந்தரம், உதவி பொறியாளர் சரவணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.