districts

மதுரை முக்கிய செய்திகள்

மதுரை மேற்கு தொகுதி வார்டுகளில் சு.வெங்கடேசன் எம்.பி.,  இன்று மக்கள் சந்திப்பு

மதுரை, ஜூன். 30-   மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி வார்டுகளில்  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில்  மக்கள் சந்திப்பு - கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் ஜூலை 1 அன்று நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு பைபாஸ் ரோடு, குரு தியேட்டர் பஸ்ஸ்டாப் அருகில் உள்ள ஸ்ரீ லெட்சுமி மஹாலில் முகாம் நடைபெறுகிறது. இதில் 1. புதுவிளாங்குடி, 2.சாந்திநகர் (ரயிலார் நகர்), 20. பழைய விளாங்குடி, 62.அரசரடி ஒத்தக்கடை, 63.பெத்தானியாபுரம், 64. மேட்டுத்தெரு, 65.சம்மட்டிபுரம், 66.கோச்சடை, 67. விராட்டிபத்து, 68. பொன்மேனி, 69. சொக்கலிங்கம் நகர் ஆகிய பகுதிகளில் காலையிலும், பிற்பகல் 2. 30 மணிக்கு  பழங்காநத்தம் மாநகராட்சி மஹாலில்  வார்டுகள் 70.துரைச்சாரி நகர், 71. மாடக்குளம், 72. பைக்காரா 74. பழங்காநத்தம், 93. கோபாலிபுரம் ஆகிய வார்டுகளுக்கு நடைபெறும் . இதில் பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகளை சரி செய்திட, தீர்வு கண்டிட பட்டா பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, வீட்டுவரி, தெருவிளக்கு பிரச்சனை, முதியோர், விதவை சான்று மற்றும்  உதவித்தொகை பெறுவதற்கு மனுக்கள் அளிக்கலாம். மாநகராட்சி ஆணையாளர், மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், மாநகராட்சி அதிகாரிகள் ‘ மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

நடக்க சிரமப்பட்ட முதியவரை பாதுகாப்பாக அழைத்து வந்த பழனி கோவில் ஊழியர்கள் அவதூறு செய்திக்கு நிர்வாகம் மறுப்பு

பழனி, ஜூன் 30  பழனி  தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு கிருஷ்ண கிரியை சேர்ந்த முருகேசன் என்ற (85 வயது) என்ற முதியவர்  தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். தரிசனம் செய்த பின் கீழே இறங்க மின் இழுவை ரயிலுக்கு சென்றுள்ளார். அங்கே, சேவை நேரம் முடிந்துவிட்டதால் மின் இழுவை ரயில் இயக்கப்பட வில்லை. இதனையடுத்து முதியவர் கோவில் படிகளில் உட்கார்ந்தபடியே சிரமப்பட்டு கீழே இறங்கினார். இதனையறிந்த கோவில் ஊழியர்கள் அவருக்கு உதவி செய்து கீழே அழைத்து வந்தனர்.  படிக்கட்டில் தவழ்ந்த வந்த முதியவர் குறித்து கோவில் நிர்வாகம் விசாரித்து அறிந்தது.  முதியவர் மற்றும் உடன் வந்த ஏழு நபர்கள் இரவு 09:30 மணியளவில் டிக்கெட் கேட்டபோது, சர்வர் பரா மரிப்பு + கூட்டமும் அதிகமாக  இருப்பதால், முதியவர் வின்ச்சில் செல்லட்டும் என்று கூறினர். ஆனால் முதியவர் மற்றும் அவருடன் வந்தவர்கள் நடந்தே செல்வதாக சொல்லி சென்றனர். பின்னர் தகவல் தெரிந்து கோவில் ஊழியர்கள் முதிய வரை தூக்கி அழைத்து வந்தனர்.  பிரஹாரத்தில் முதியவர் நன்றாக நடந்து வரும் கேமரா பதிவுகள் இரண்டு உள்ளன. அவதூறு பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் பகிரப்படும் செய்திகளில்  உண்மை இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்தது.

கஞ்சா கடத்திய 3 பேருக்கு  தலா 10 ஆண்டுகள் சிறை 

தேனி, ஜூன் 30-  தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா மகன் பூபாலன்(29), தங்கராசு மகன் முரளீதரன்(41), பால்பாண்டி மகன் விஜயன்(42). இவர்கள் இருசக்கர வாகனங்களில் கஞ்சா கடத்திச் சென்றதாக  2022 ஆம் ஆண்டு ஓடைப்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.  இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.ராஜவேல், கஞ்சா கடத்திய பூபாலன், முரளீதரன், விஜயன் ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை, தலா ரூ.ஒரு லட்சம் அபரா தம் விதித்து தீர்ப்பளித்தார்.

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் விரைவில் வழங்கப்படும் இராமநாதபுரம் ஆட்சியர் உறுதி

இராமநாதபுரம், ஜூன்30-   இராமநாதபுரம் மாவட் டத்தில் வறட்சி நிவாரணம் விரைவில் வழங்கிட நட வடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது என்று விவசாயி கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பா. விஷ்ணு சந்திரன் உறுதி அளித்தார். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலை மையில் விவசாயிகள் குறை தீர் கூட்டம்  வெள்ளிக்கிழமை யன்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் வட்டார வாரியாக விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொ டர்பாக பல்வேறு கோரிக் கைகளையும், கருத்துக ளையும் எடுத்துக்கூறினார். இக்கூட்டத்தில் வறட்சி நிவாரணம், ஊரணி தூர்வா ருதல்,  விவசாயிகளின் குழந் தைகளுக்கு கல்வி கடன் வழங்குவது, கண்மாய் களை தூர்வாருதல், தடுப் பணை கட்டுதல் போன்ற  பல்வேறு கோரிக்கைகளை விவசாய சங்கப்பிரதிநிதிகள் கூறினர்.  இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசுகை யில், 2022-23 ஆம் ஆண்டுக் கான வறட்சி நிவாரணம் வழங்கிட அனைத்து நட வடிக்கையும் மேற்கொள் ளப்பட்டுள்ளது. விரைவில் அரசாணை வெளியிட்டு விவ சாயிகள் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.  இந்த கூட்டத்தி, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந் தராஜலு, வேளாண்மைத் துறை இணை இயக்குநர்.சரஸ்வதி  மற்றும் அதிகாரி கள்  கலந்து கொண்டனர்.