districts

img

சிபிஎம் தா.பேட்டை ஒன்றியச் செயலாளராக எஸ்.பாண்டியன் தேர்வு

திருச்சிராப்பள்ளி, அக்.17 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட தா.பேட்டை ஒன்றி யக் குழுவின் 15-வது மாநாடு  சனிக்கிழமை தா.பேட்டை ராஜ்மஹால் திருமண மண்ட பத்தில் தோழர்கள் கே.வரத ராஜன், எஸ்.கிருஷ்ண மூர்த்தி நினைவரங்கத்தில் நடந்தது.  மாநாட்டு கொடியை மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.சுப்பிரமணியன் ஏற்றி னார். மாநாட்டிற்கு கோவிந்த சாமி, தங்கவேல், மரகதம் ஆகியோர் தலைமை வகித்த னர்.  மாநாட்டை மாநில செயற் குழு உறுப்பினர் ஏ.லாசர் துவக்கி வைத்தார். புறநகர் மாவட்ட செயலாளர் ஜெய சீலன் நிறைவுரையாற்றினார்.   மாநாட்டில் தா.பேட்டை ஒன்றிய செயலாளராக எஸ். பாண்டியன் தேர்வு செய்யப் பட்டார். 11 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்ய ப்பட்டது.  தா.பேட்டை ஒன்றியத் தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தினத் தோறும் குடிநீர் வழங்க வேண்டும். அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும். நீலி யாம்பட்டி கிராமத்தில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;