திண்டுக்கல், ஜுன் 14- பேருந்து வசதி செய்து தர கோரி மீனாட்சி நாயக்கன்பட்டி அரசு பள்ளி மாணவ, மாண வியர்கள் பெற்றோர்களுடன் இந்திய மாண வர் சங்கம் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் அருகே குரும்ப பட்டி ஊராட்சிக்குட்பட்ட மீனாட்சிநாயக்கன் பட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயிலும் பெரும் பான்மையான மாணவ மாணவியர்கள் மீனாட்சி நாயக்கன்பட்டி, சோலைராஜா காலனி, குரும்பபட்டி ஆகிய பகுதிகளில் இருந்து வருகின்றனர். இந்த பள்ளி தரம் உயர்த்தப்படுவதற்கு முன்பு மீனாட்சி நாயக்கன்பட்டி ஊருக்குள் பள்ளி செயல் பட்டது. தற்போது உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு புதிய பள்ளி கட்டி டம் போக்குவரத்து வசதி இல்லாத திண்டுக் கல் புறவழிச்சாலைக்கும், எம்.வி.எம்.அர சினர் மகளிர் கலை அறிவியல் கல்லூ ரிக்கும், திண்டுக்கல் பழநி இரயில் பாதைக் கும் இடையில் கட்டப்பட்டுள்ளது. புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்ட 2018 - 2019 ஆம் ஆண்டு முதல் மாணவ, மாணவிகள் தொடக்கக்கல்வி முடித்து உயர்நிலை பள்ளி கல்விக்கு மீனாட்சி நாயக்கன் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சேரும் போது உரிய பாதை வசதியோ, போக்குவரத்து வசதியோ இல்லை.இதனால் தனியார் மினி பேருந்து மூலம் கட்டணம் செலுத்தி பள்ளிக்கு சென்று வந்தனர். மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் கட்டு மான தொழிலாளர்களாகவும், பஞ்சாலை தொழிலாளர்களாகவும், சாலையோர வியாபாரிகளாகவும் என உடல் உழைப்பு தொழிலாளர்களாக உள்ளனர்.
எனவே குழந்தைகளின் போக்கு வரத்துக்கு என மாதம் 1000 ரூபாய் வரை செலவு செய்ய முடியாத சூழல் உள்ளது. இருந்த போதிலும் பல்வேறு பொருளா தார சிரமங்களுக்கும் மத்தியில் தனியார் பேருந்து மூலம் கட்டணம் செலுத்தி பள் ளிக்கு குழந்தைகளை அனுப்பி வைத்த னர். மினி பேருந்துகள் இயங்காத நாட்க ளில் மாணவ மாணவிகள் புறவழிச்சாலை வழியே வந்து இரயில் பாதை மேம்பாலத் தின் கீழ் பாதுகாப்பற்ற சூழலில் பள்ளிக்கு செல்கின்றனர். இந்த வழி சமூக விரோதி கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். எனவே இந்த பகுதியில் மாணவ, மாணவி யர்கள் வந்து செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே பள்ளி மாணவ, மாணவியருக்கு மீனாட்சி நாயக்கன்பட்டி ஊர் பகுதியில் இருந்து பள்ளி வர காலை மாலை இரண்டு நேரங்களிலும் அரசு பேருந்து இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த முற் றுகை போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு இந்திய மாண வர் சங்க மாவட்ட தலைவர் முகேஷ் தலைமை வகித்தார். பாலர் பூங்கா அமைப் பாளர் பாலமுருகன் முன்னிலை வகித் தார். மாணவர் சங்க தலைவரும், பெற் றோர்களும் முதன்மைக் கல்வி அலுவல ரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட முதன்மை கல்வி அலுவலர் நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.