தேனி, அக்.8- பெரியகுளம் அருகே கஞ்சா வழக்கில் தொடர்புடைய இருவரின் ரூ.58 லட்சம் பெறுமான வீடு, கார், நிலம் உள்ளிட்ட சொத்துக்களை முடக்கி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, கடத்தலில் தொடர்புடைய நபர்களின் சொத்துக்களை முடக்கி காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தேனி -அல்லிநகரம் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக பெரியகுளம் கைலாச பட்டியை சேர்ந்த கங்காதேவா (26) பிரபாகரன் (22) ஆகிய இருவர் கடந்த சில தினங்களுக்கு முன் காவல்துறை யினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு மற்றும் தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் ஆகி யோர் உத்தரவால், கைலாசபட்டியில் கங்காதேவாவின் பெயரில் உள்ள வீடு, கார், இரு சக்கர வாகனம் மற்றும் அவரது சகோதரி பெயரில் இருக்கும் நிலம் என 53,82,787 ரூபாய் மதிப்பிலான அசையும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அதே போல மற்றொரு குற்றவாளியான பிரபாகரனின் பெயரில் கைலாசபட்டியில் உள்ள 4,52,085 ரூபாய் மதிப்பி லான வீடு என இருவரது பெயர்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் உள்ள வீடு, நிலம், வாகனங்கள் உள்பட ரூ. 58,34,872 மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள தாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே அறிக்கை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடு மையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரி வித்துள்ளார்.