districts

மதுரை முக்கிய செய்திகள்

இன்றைய நிகழ்ச்சி

சிபிஎம் சார்பில் மேலவளவு தியாகிகள் தினம் அனுசரிப்பு: பங்கேற்பு: எம்.சின்னதுரை எம்எல்ஏ., கே.ராஜேந்திரன், எஸ்.பாலா, எஸ்.கே.பொன்னுத்தாய், எம்.கண்ணன். இடம்: மேலவளவு, ஜூன் 30 காலை 10 மணி. 

இராமநாதபுரம் கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை 

இராமேஸ்வரம், ஜூன் 29-  இராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் சாகர் ஹவாஜ் பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமையன்று நடைபெற்றது. இந்தியாவில் கடல் வழியாக அந்நியர்கள் ஊடுருவி  தாக்குதல் நடத்துவதை தடுக்கும் விதமாக ஆண்டு தோறும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வரு கிறது. இதனைத் தொடர்ந்து, தமிழக கடலோரப் பகுதியில் ஊடுருவலை கண்காணித்து தடுக்கும் வகையில் சாகர்  ஹவாஜ் பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை காலையில் தொடங்கியது இதில் இந்திய கடற்படை, கடலோர காவல் படை யினர், தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் ஒன்றிய மாநில உளவுத்துறையினர் ,மாவட்ட காவல்துறையினர் ஒட்டுமொத்தமாக கடலோரப் பகுதி யில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னர் வளைகுடா மற்றும் பாக்நீரிணை பகுதியில் கடற்படை, கடலோர காவல்  படையினர், மற்றும் தமிழக கடலோர பாதுகாப்பு போலீ சார் அதிவேக படகுகளில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

வேலை தருவதாக ஐடி ஊழியரிடம் ஆன்லைனில் ரூ.15 லட்சம் மோசடி

தேனி, ஜூன் 29-  பகுதி நேர வேலை தருவதாக ஐடி ஊழியரிடம் ஆன்லைனில் ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக தேனி சைபர்  கிரைம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (34). ஐ.டி.கம்பெனி ஊழியர்.  தற்போது வீட்டில் இருந்தபடி பணிபுரிந்து வருகிறார். கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பகுதி நேர விளம்பர இணைப்புக்குள் சென்றார். அதனைத்  தொடர்ந்து ஆனந்தகுமாரை தொடர்பு கொண்ட நபர் ஆன்லைனில் பகுதிநேர வேலையில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பது குறித்து விளக்கினார். இதனைத் தொடர்ந்து சில பொருட்களை ஆன்லைன்  மூலம் விற்பனை செய்து கமிஷன் பெற்றுள்ளார். ஆரம்பத்  தில் கமிஷன் தொகை சரியாக வந்ததால் ஆனந்தகுமா ருக்கு இதில் நம்பிக்கை ஏற்பட்டது. இதனால் கூடுதல் வரு வாய்க்கு ஆசைப்பட்டு அடுத்தடுத்து பணத்தை முதலீடு  செய்துள்ளார். ஆனால் கமிஷன் தொகை தராமல் பல்வேறு  காரணங்களைக் கூறியுள்ளனர். தொடர்ந்து ஆன்லைன் விற்பனையில் ஈடுபட்டால் மட்டுமே பணத்தை திரும் பப்பெற முடியும் என்று கூறியுள்ளனர். அந்தவகையில் பல்வேறு வங்கிக்கணக்குகளுக்கு ரூ.15லட்சத்து 69ஆயிரத்தை பல்வேறு கட்டங்களாக செலுத்தியுள்ளார். இருப்பினும் பல மாதங்களாக கமிஷன்  தொகை மற்றும் முதலீடு தொகை கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஆனந்தகுமார் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை செய்த தேனி சைபர் கிரைம் காவல்  ஆய்வாளர் அரங்கநாயகி வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

கணவனை இழந்த பெண்ணுக்கு மிரட்டல் மாமனார் மீது வழக்கு பதிவு

தேனி, ஜூன் 29-  தேனி ஒன்றியம் தப்புக்குண்டு சாவடி தெருவை சேர்ந்த வர் விக்னேஷ் மனைவி கெளசல்யா (27). விக்னேஷ் 19.7.2022 ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் இறந்து  விட்டதாகவும். அப்போது ரூ 3 லட்சம் நஷ்ட ஈடாக தரு வதாக கூறி, இனி வரும் காலங்களில் சொத்துக்களில் பங்கு இல்லை என கையெழுத்து போடச் சொல்லி மாம னார் மிரட்டியதாக கௌசல்யா கூறுகிறார். மேலும் சீதனமாக வந்த 15 பவுன் நகையை அடகு  வைத்து கணவருக்கு மருத்துவ செலவு பார்த்ததாகவும், சாப்பாட்டிற்கு வழியின்றி இருப்பதாக தேனி மகளிர் காவல்  நிலையத்தில் புகார் அளித்தார் .அதன் பேரில் கெளசல்யா வின் மாமனார் ஞானவேல் ,மைத்துனர் அரவிந்த் ஆகி யோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

போதைப்பொருள் கடத்த முயன்ற கைதி மீது வழக்கு பதிவு

கடமலைக்குண்டு, ஜூன்.28- தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே தேக்கம்பட்டி யில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது.  இங்கு திண்டுக்கல் மாவட்டம் பொன்மாந்துரையை சேர்ந்த அன்பழகன் என்பவர் விசாரணை கைதியாக உள்ளார். இவர் மீது போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் ஈஸ்வரன், கருணாகரன் ஆகி யோர் புதனன்று அன்பழகனை வழக்கு விசாரணைக்காக திண்டுக்கல் விரைவு மகளிர் நீதிமன்றத்திற்கு அழைத்துச்  சென்றனர். அங்கு விசாரணை முடிந்த நிலையில் மீண்டும் அவரை சிறையில் அடைப்பதற்காக தேக்கம்பட்டி மாவட்ட சிறைக்கு அழைத்து வந்தனர்.  அப்போது நுழைவாயில் பகுதியில் பணியில் இருந்த காவலர் விக்னேஷ் அன்பழகனை சோதனை மேற்கொண்டார். சோதனையில் அன்பழகன் ஆசனவாய் பகுதியில் மறைத்து எடுத்து வந்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட 48 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 17 போதை மாத்திரைகளை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து போதைப் பொருட்கள் எவ்வாறு அன்பழகனுக்கு கிடைத்தது? அவருக்கு உதவியவர் யார் என்பது குறித்து கண்டமனூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் எடுத்து  வந்த குற்றத்திற்காக அன்பழகன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

சாலை விபத்தில் ஆட்டோ தொழிலாளி பலி

விருதுநகர், ஜூன் 29- விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (31). ஆட்டோ  தொழிலாளி.இந்நிலையில், மத்திசேனையிலிருந்து ஆமத்தூர் நோக்கி ஆட்டோவில் வந்த போது, எதிரே  சாலையின் குறுக்கே மூதாட்டி ஒருவர் வந்துள்ளார்.  இதனால் செந்தில்குமார், பிரேக் போட்டுள்ளார். இதில் நிலைதடுமாறி ஆட்டோ விபத்துக்குள்ளானது. இதில், அவர் படுகாயமடைந்தார். அவரை அக்கம்  பக்கத்தினர் மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு செந்தில்குமாரைப் பரிசோதித்த மருத்து வர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காவல்துறையினர் பாதுகாப்புடன்  மாமன்னன் திரையிடப்பட்டது

தேனி, ஜூன் 29- திரைஇயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடி வேல் நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் காவல்துறையினர் பலத்த  பாதுகாப்புடன் திரையிடப் பட்டது. மாமன்னன் இசை வெளி யீட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேச்சு சர்ச்சையாக மாறியது. இதன் காரணமாக சில  அமைப்புகள் மாமன்னன்  திரைப்படம் திரையிடக் கூடாது என எதிர்ப்பு தெரி வித்தனர். இந்நிலையில் வியாழ னன்று தேனி பழனிசெட்டி பட்டியில் உள்ள வெற்றி சினி மாஸ் திரையரங்கில் 11.30 மணிக்கு மாமன்னன் திரைப்படம் வெளியாக இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெற்றி சினி மாஸ் திரையரங்கை முற்று கையிட தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். காவல்துறையினர் அவர் களை தடுத்து நிறுத்தி 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.  அதனைத் தொடர்ந்து திரையரங்கத்திற்கு வந்த  அகில இந்திய பார்வர்டு  பிளாக் கட்சியினர், மாமன் னன் திரைப்படத்திற்கு அனு மதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகளை அகற்ற வேண்டும் என  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அங்கிருந்த காவல்துறை யினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதன் அடிப்படையில் அவர்கள் கலைந்து சென்றனர். அதனைத் தொடர்ந்து திரையரங்கம் வந்த நேதாஜி பார்வர்டு பிளாக் கட்சியினர் மாமன்னன் படத்தை திரை யிடக்கூடாது என்றும் இயக்குநர் மாரி செல்வ ராஜை கைது செய்யக் கோரி யும் திரையரங்கம் முன்பு  ஆர்ப்பாட்டம் செய்து பின்  னர் கலைந்து சென்றனர். இதன் காரணமாக திரை யரங்கத்திற்கு நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புகளுக்கு இடையே போலீஸ் பாதுகாப்புடன் மாமன்னன் திரைப்படம் வெற்றி சினிமாஸில் திரை யிடப்பட்டுள்ளது.

மீனாட்சி திருக்கல்யாணத்தில் ரூ.26 லட்சம் மொய் வசூல் 

மதுரை, ஜூன் 29- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கடந்த மே 2 ஆம்தேதி நடைபெற்றது. இதில் தமிழகம் முழு வதும் இருந்து லட்சக்கணக்கானோர் வருகை தந்தனர். திருமணம் நடைபெற்ற பின்பு பக்தர்களுக்கு கல்யாண விருந்து மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நடை பெற்றது. பக்தர்களிடம் கோவில் நிர்வாக சார்பாக மொய்  வசூல் செய்யப்பட்டது இதற்காக கோவில் வளாகத்திற்குள் 6 இடங்களில் மொய் வசூல் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.  இதுகுறித்து மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் ஆர்டிஐ மூலம் மொய் விருந்தில் கிடைக்கப்பட்ட வசூல் எவ்வளவு என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு  கோவில் நிர்வாகம் அளித்த பதிலில், கடந்த 2022 மற்றும்  2023 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சுமார் 26 லட்சத்து 80  ஆயிரத்து 350 ரூபாய் மொய் வசூல் மூலம் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை

விருதுநகர், ஜூன் 29- தமிழகஅரசு, தேர்தல்கால வாக்குறுதிப்படி புதிய  ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூ தியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு  அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் விருது நகர் மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. விருதுநகரில் ஆசிரியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற  கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் திருவண்ணா மலை தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எஸ். இராமசுப்புராஜ், ஜெகதீசன் ஆகியோர் பேசினர்.  முடிவில், தமிழக அரசின் தேர்தல்கால வாக்குறு திப்படி 70 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு கூடுதல்  ஓய்வூதியம் வழங்க வேண்டும்.ச த்துணவு, அங்கன்வாடி. ஊராட்சி எழுத்தர், வருவாய் கிராம ஊழியர்கள் உள்ளிட்ட  தொகுப்பூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்கிட வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் விரைவில் செலவுத்  தொகை வழங்கிடக் கோரி வரும் ஜூலை 18இல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்து வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.