சிவகங்கை, ஜூன் 4- தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் சிவகங்கை மாவட்டம், எட்டாவது உட்கோட்ட மாநாடு அரசு ஊழியர் சங்க கட்டட வளாகத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு உட்கோட்ட தலைவர் ஜெய ராமன் தலைமை வகித்தார். உட்கோட்ட இணைச்செயலாளர் மருது வரவேற்றார். மாவட்டத் தலைவர் மாரி தொடக்க உரை யாற்றினார். உட்கோட்ட செயலாளர் சேது ராமன் வேலை அறிக்கையும் உட்கோட்ட பொரு ளாளர் கருப்பையா வரவு-செலவு அறிக்கை யும் சமர்ப்பித்தனர். மாநில பொருளாளர் தமிழ், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர சிறப்பு ரையாற்றினர். மாவட்ட இணைச்செயலாளர் சின்னப்பன், வட்ட கிளைச்செயலாளர் மணி மாறன், நடராஜன் ,பாண்டித்துரை ,மாவட்ட மேனாள் செயலாளர் பாண்டி, ஜெயபிரகாஷ் ஆகியோர் பேசினர். மாவட்ட செயலாளர் முத்தையா நிறைவுரையாற்றினார் . சாலைப்பராமரிப்புப் பணிகளை தனியா ருக்கு வழங்கக்கூடாது. சாலைப்பணி யாளர்கள் 41 மாதங்கள் பணிநீக்கம் செய் யப்பட்ட காலத்தை பணிக்காலமாக முறைப் படுத்தி பணப்பலன்கள் வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் தனியார் பரா மரிக்கும் திட்டத்தை கைவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும் .தனியார் பராமரிக்கும் பகுதி யில் சாலை பணியாளர்களை பயன்படுத் தக்கூடாது. நெடுஞ்சாலைத் துறையில் பராமரிப்புப்பணிக்கு ஐந்து கிலோ மீட்டருக்கு இரண்டு சாலைப்பணியாளர்கள் வீதம் பணி நியமனம் செய்து கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.உட்கோட்ட தலைவராக மலை ராஜ், செயலாளராக சேதுராமன் ,பொருளா ளராக கருப்பையா மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.