districts

மதுரை முக்கிய செய்திகள்

விபத்தில் சாலைப் பணியாளர் பலி

சாத்துர், ஜூலை 11- சாத்தூர் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த லாரி யின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் சாலைப் பணியாளர் உயிரிழந்தார். சாத்தூர் அருகே உள்ள நள்ளியைச் சேர்ந்தவர் முத்தையா(52). இவர் நெடுஞ்சாலைத்துறையில் சாலைப்  பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இரு சக்கர வாகனத்தில் சாப்பாடு வாங்கச் சென்றுள்ளார். அப்போது, போக்குவரத்து சிக்னல் ஏதும் இல்லாமல்  இருட்டிற்குள் லாரி ஒன்று நின்றுள்ளது. இந்நிலையில், முத்தையா ஓட்டிச் சென்ற வாகனம் லாரி மீது மோதியது.  இதில் படுகாயமடைந்தவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு,  கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். பின்பு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாவின் மகள் கீர்த்தனா கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் கரிசல்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டு நர் புஷ்பராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மூதாட்டியிடம் நகை பறிப்பு

அருப்புக்கோட்டை, ஜூலை 11- அருப்புக்கோட்டை அருகே சாலையில் நடந்து சென்ற  மூதாட்டியிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அருப்புக்கோட்டை அருகே உள்ள தோணுகாலைச் சேர்ந்த அழகர்சாமி மனைவி சண்முகவடிவு(65). இவர்  ஆத்திபட்டி நாரணாபுரம் சாலையில் கடைக்கு பொருட்கள் வாங்க நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் சண்முக வடிவு அணிந்திருந்த 3.5 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார்களாம். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பள்ளி சிறுமி தற்கொலை 

தேனி, ஜூலை 11- தேனி அருகே பள்ளி சிறுமி தூக்கு மாட்டி தற்கொலை  செய்து கொண்ட விவகாரத்தில் காவல் துறையினர் வழக்  குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தேனி பழனிசெட்டிபட்டி தண்ணி தொட்டி அருகே குடியிருந்து வரும் 13 வயது சிறுமி தேனியில் உள்ள மேரி மாதா மெட்ரிக் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் திங்களன்று அதிகாலை 2 .50 மணிக்கு தனது வீட்டு படுக்கை அறையில் உள்ள காற்  றாடி மாட்டும் கிளாம்பில் தூக்கு போட்டுள்ளார் .அதை  பார்த்த மாணவியின் தாய் சால்வையை அறுத்து,மயக்க நிலையில் இரண்டு தனியார் மருத்துவமனைகளில் காட்டி  விட்டு பின் தேனி அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு  செல்லும் வழியில் இறந்து விட்டதாக இறந்த மாணவி யின் தந்தை பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சார்பு ஆய்வாளர் லதா வழக்கு  பதிவு செய்து மாணவி இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

வீட்டுமனை பட்டா கேட்டு ஆட்சியரிடம் விவசாயத் தொழிலாளர்கள் மனு

சிவகங்கை, ஜூலை 11- சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் சக்கந்தி, சாலூர், இடை யமேலூர், பாசாங்கரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவ சாயத்தொழிலாளர்கள் வீட்டுமனை பட்டாகேட்டு விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சித் குறைதீர்க்கும் நாளில் மனு கொடுத்தனர். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் மணியம்மா, சிவகங்கை ஒன்றிய செயலாளர் முத்துக்கருப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கிராம  நிர்வாக அலுவலர் மூலமாக விசாரித்து பட்டா வழங்க நட வடிக்கை எடுக்கிறேன் என்று ஆட்சியர் உறுதியளித்தார்.

வேடசந்தூர் அருகே 600 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது

வேடசந்தூர், ஜூலை 11- வேடசந்தூர் அருகே சொகுசு காரில் கடத்தி வந்த 600 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். வேடசந்தூர் அருகே கரூர் - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் கல்வார்பட்டி சோதனை சாவடியில் திங்களன்று அதிகாலை முதல் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் நோக்கி வேகமாக வந்த ஒரு சொகுசு காரை போலீசார் தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குபின் முர ணாக பதில் கூறினார். இதனையடுத்து போலீசார் சந்தேகம் அடைந்து காரை  சோதனை செய்தனர் அப்போது காருக்குள் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா என்னும் புகை யிலைப் பொருட்கள் 38 முடடைகளில் 600 கிலோ இருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். போலீசார் குட்காவையும் சொகுசு காரையும் பறிமுதல் செய்து செய்தும் அதனை ஓட்டி வந்த பெங்களூரில் தசர ஹல்லி கே.கே.சாலையில் வசித்து வரும் அமர்பிரீத்சிங் (வயது30) என்பவரை பிடித்து கூம்பூர் போலீசில் ஒப்ப டைத்தனர். இது குறித்து கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  குட்கா பொருட்கள் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்து அமர்பிரீத்சிங்கை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூம்பூர் போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்த தனிப்படையை பாராட்டி னார்.

விவசாயிகள் சங்க  ஆத்தூர் ஒன்றிய மாநாடு 

சின்னாளபட்டி, ஜூலை 11- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய மாநாடு செம்பட்டியில் ஞாயி றன்று நடைபெற்றது. மா நாட்டிற்கு ஒன்றியத் தலைவர் ஆர்.பாண்டியராஜன் தலைமை வகித்தார்.எம்.முத்துப் பாண்டி வரவேற்றார். பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராமசாமி துவக்கி வைத்துப் பேசி னார். ஒன்றியச் செயலாளர் எஸ்.பிச்சை மணி வேலை யறிக்கை சமர்பித்தார் .சிஐடியு ஒருங்கிணைப்பாளர் வி.கே.முருகன் வாழ்த்திப் பேசினார். மாவட்டச் செயலா ளர் என்.பெருமாள் நிறைவுரையாற்றினார். மாநாட்டில் ஒன்றிய தலைவராக பாண்டியராஜன், செயலாளராக பிச்சைமணி, பொருளாளராக முத்துப் பாண்டி உட்பட 11 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு  செய்யப்பட்டது. அய்யம்பாளையம் மருதாநதி இருபுற வாய்க்கால் களையும் செப்பனிட்டு பாசன பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தேவரப்பன்பட்டி அய்யம்பாளையம் குட்டிக்காடு வழியாக செல்லும் பாதையை போர்க்கால  அடிப்படையில் செப்பனிட வேண்டும். விவசாயிகளுக்கு வன விலங்கு பாதிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இலங்கையிலிருந்து மேலும்  6 பேர் தமிழகம் வருகை

இராமேசுவரம், ஜூலை 11- இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி  காரணமாக அங்கு ஆட்சியாளர்களுக்கு எதிரான நாடு  முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அத்தியா வசிய பொருள்கள் கிடைப்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்  டுள்ளது ஆகவே அங்கு வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ள தால் அங்குள்ள மக்கள் அண்டை நாடுகளை தேடி அகதி களாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே 23 குடும்பங்களை சேர்ந்த 105 பேர் படகு மூலம் தமிழகத்திற்கு அகதிகளாக  வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மண்டபம் கேம்ப்  இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்  கப்பட்டுள்ளனர்.   இந்நிலையில், இந்திய கடலோர காவல்படைக்கு சொந்த மான ஹோவர் கிராப் கப்பலில் தனுஷ்கோடி அருகே இந்திய கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் திங்கட்கிழமை ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது 6 ஆம்  மணல் திடையில் கைக்குழந்தைகளுடன் 6 பேர் இருப்பதை கண்ட கடலோரகாவல்படையினர் விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இலங்கை வவுனியா மாவட்டத்திலிருந்து இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் ,இரண்டு குழந்தைகள் என ஆறு பேர் ஞாயிற்றுகிழமை இரவு எட்டு மணிக்கு பிளாஸ்டிக் படகில் மன்னார் பகுதியில் இருந்து 4 லட்சம் ரூபாய் கொடுத்து புறப்பட்டு தங்கட்கிழமை காலை 7 மணி அளவில் தனுஷ்கோடி அருகே உள்ள முதல் மணல் திட்டிற்கு வந்ததாக தெரிவித்தனர்.  இந்திய அதிகாரிகள் பாதுகாப்புடன் அழைத்து செல்  வார்கள் என தெரிவித்து விட்டு படகு இலங்கை சென்று  விட்டதாக கூறினர். இதனையடுத்து, 6 பேரையும் ஹோவர்  கிராப்ட் கப்பலில் ஏற்றி வந்து தமிழக கடலோர பாது காப்பு குழும காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அனைவரிடம் விசாரணை மேற்கொண்டு பின்னர் மண்ட பம் கேம்ப் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமிற்கு  அழைத்து சென்று அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

புகையிலை விற்றவர் கைது

இராஜபாளையம், ஜூலை 11- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். இராஜபாளையம் தெற்கு காவல்துறையினர் தோப்புப்பட்டி தெரு  பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பெட்டிக்கடையில் புகை யிலை,குட்கா பொருள்கள் விற்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஐந்து கிலோ குட்கா பொருள்கள் மற்றும் ரூ.11,450 பறிமுதல் செய்து சிவகாமிபுரம் தெருவைச் சேர்ந்த பொன்னுச்சாமி (47) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஜூலை 11- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய  பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல்லில் திங்களன்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். ஜேம்ஸ் தலைமை வகித்தார். பல்வேறு சங்க நிர்வாகிகள்  பாலகுரு, ஜோசப் சேவியர், தென்றல் அரசி, பிரான்சிஸ்  பிரிட்டோ, ராஜேந்திரன் ஆகியோர் விளக்கப் பேசினர்.  தமிழ்நாடு அரசு உதவி பெறும்- தனியார் பள்ளி ஆசிரி யர் அலுவலர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் அமல ராஜன் சிறப்புரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் விவேகானந்தன் ஆதரித்துப் பேசி னார். செந்தில்குமார் நன்றி கூறினார்.

நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை  முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தேனி, ஜூலை 11- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 2122 கன அடியாக உயர்ந்துள்ளது  கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரு கிறது. இதனால் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் முல்லைப்  பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அணையின் நீர்மட்டம் திங்களன்று காலை நிலவரப்படி 128.40 அடியாக உள்ளது. ஞாயிறு காலை 1509 கன அடியாக இருந்த நீர்வரத்து திங்களன்று காலை 2122 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1611 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு  4352 மி.கன அடியாக உள்ளது. முல்லைப் பெரியாறு  அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவ தாலும், வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரு கிறது. வைகை அணையின் நீர்மட்டம் 55.32 அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து 1612 கன அடி மதுரை குடிநீர் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்துக்கு என மொத்தம் 969 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு  2770 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடியாகவும், சோத்துப்பாறை அணை  நீர்மட்டம் 76.26 அடியாகவும் உள்ளது. மழையளவு: பெரி யாறு 43, தேக்கடி 28, கூடலூர் 4.7, உத்தமபாளையம் 4.8, வீரபாண்டி 3.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

மண்டபம் அருகே வேன் - பேருந்து மோதி விபத்து: 4 பேர் பலி

இராமேசுவரம், ஜூலை 11- மண்டபம் அருகே தனியார் பேருந்து  மற்றும் மீனவர்கள் வந்த வேன் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.  இராமநாதபுரத்தில் மீனவ அமைப்பு கள் சார்பில் கடல் அட்டை மீதான தடை யை நீக்க கோரி திங்கள்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  கலந்துகொள்ள மண்டபம், வேதாளை, மரைக்காயர்பட்டணம், பெரியபட்ட ணம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மீனவ அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் வேன்களில் சென்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.  ஆர்ப்பாட்டம் நிறைவடைந்த நிலை யில் அனைவரும் வேன்களில் வீடு  திரும்பிக்கொண்டிருந்தனர். மண்டபம்  அருகே மரைக்காயர் பட்டணம் பகுதி யில் வேன் வந்து கொண்டிருக்கும் போது தனியார் பேருந்து, வேன் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளனது. இதில்,  முகைதீன் அப்துல்காதர், ரஜாப் ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலே உயிரி ழந்தனர். இதில் படுகாயமடைந்த சேது ராமன்,அன்சர்அலி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்  பட்டனர். இதில், சேதுராமன், அன்சர்  அலி ஆகிய இரண்டு பேர் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தனர். மேலும் மணி கண்டன் என்பவர் தீவிர சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார். மீதமுள்ள 18 பேருக்கு சிகிச்சை அளிக்  கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் படுகாய மடைந்தவர்களை நேரில் சந்தித்து அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்ட றிந்து விரைந்து சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.  போராட்டம் நடத்தி விட்டு சென்ற மீனவர்கள் நான்கு பேர் உயிரிழந்த சம்ப வம் மண்டபம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிபிஎம் ஆறுதல் விபத்து செய்தி அறிந்ததும் மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் என்.கலை யரசன், இ.கண்ணகி ,தாலுகா செயலா ளர் செல்வராஜ், மாவட்டக்குழு உறுப்பி னர் வான் தமிழ் இளம் பரிதி உள் ளிட்டோர் உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறு தல் கூறி விவரங்களை கேட்டறிந்தனர். விபத்தில் பலியானவர்கள் குடு பத்திற்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் அரசு வேலை வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது.