அருமனை, அக். 27 கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் முழுக்கோடு ஊராட்சியில் உத்திரங்கோடு சாண்டிப் பாறை சாலையில் விளவங் கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 7 லட்சம் ஒதுக்கப்பட்டு இதற்கான காங்கிரீட் தளம் அமைக்கும் பணியை ஊராட்சி தலைவர் மரிய செல்வி விலாசினி துவக்கி வைத்தார். ஊராட்சி துணைத் தலைவர் சி .சசிகுமார்.மேல்புறம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் டி .பேபி. முழுக்கோடு ஊராட்சி உறுப்பினர் ஜெயா உட்பட பலர் கலந்து கொண்டனர். முழுகோடு ஊராட்சி தலைவர் நீண்ட காலமாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி வந்தார்.